பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

லும் மழையிலும் அவர்கள் சலியாமல் உழைக்க வேண்டியவர்களானார்கள். கல்லை அடித்து அடித்து அவர்கள் கை ஓய்ந்துவிடும். இடையிடையே மாபெருங் கற்களைப் பலர் கூடி ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு இழுத்துச் செல்லவேண்டும்; பெருந் தூண்களை எடுத்து நிறுத்தி நிலை நாட்ட வேண்டும்; மாபெரும் கற்பாலங்களைக் கூரைமேல் ஏற்றவேண்டும். இவ்வேலைகளைச் செய்யும்போது கற்களின் அடியிற்சிக்கி எத்தனையோ தொழிலாளர்கள் மடிய நேரிடும். இவ்வாறு நாள் முழுவதும் உழைத்து, மாலை வேளையில் அரசாங்க அதிகாரிகள் கொடுக்கும் ரொட்டித் துண்டுகளைப் பெற்றுக் கொண்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும். வீட்டில் மனைவி மக்கள் இவ்வேழையின் வருகையை எதிர் நோக்கி இருப்பர்.

“அரச குடும்பத்தார்க்கு ஆடை நெய்யும் சேணியர்களின் நிலை மிகவும் மோசமானது. காலையிலிருந்து மாலை வரை காலை மடக்கி உட்கார்ந்து வேலை செய்யவேண்டும். இடை வேளைக்குள் குறிப்பிட்ட அளவு ஆடை நெய்தால்தான், அவர்களுக்கு உணவுண்டு. இல்லாவிட்டால் அவ் வேலை முடிந்த பிறகுதான் உணவு கொடுப்பார்கள். சாயப்பட்டறையில் வேலைசெய்யும் தொழிலாளர் நிலை இன்னும் கேவலமானது. சாயத்தண்ணீரின் நாற்றம் மூக்கைத் துளைக்கும். நாள் முழுவதும் தண்ணீருக்குள் கையைவிட்டு நூலையும், ஆடையையும் பிழிந்து கொண்டிருப்பதால், அவர்களுடைய கைகளில் குருதியோட்டமே நின்று விடும். செருப்புத் தைக்கும் தொழிலாளர்களின் நிலை-