பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

வைரம் முதலிய நவமணிகளும் பதிக்கப்பட்டிருந்தன. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, உயர்ந்த வைரக்கற்களெல்லாம் பெயர்த்து எடுக்கப்பட்டுவிட்டன. அவ்விடங்களில் போலி வைரங்களே இப்பொழுது மின்னுகின்றன.

தாஜ்மகாலின் சிறப்பை இந்திய மக்களைவிட மேலை நாட்டு மக்கள் மிகவும் உணர்ந்திருக்கின்றனர். ஆக்ராவைப் பற்றியும், தாஜ்மகாலைப் பற்றியும் ஐரோப்பியர்களே சிறந்த நூல்கள் எழுதியுள்ளனர்; அந்நூல்களில் தாஜ்மகாலின் சிறப்பை அணு அணுவாகச் சுவைத்து எழுதியிருக்கின்றனர். 17 ஆம் நூற்றாண்டிலிருந்து, தாஜ்மகாலைப்பற்றிப் பல நூல்கள் ஐரோப்பிய மொழிகளில் எழுந்த வண்ணம் உள்ளன.

தாஜ்மகாலை நேரில் கண்ட பெரினியர் என்ற பிரெஞ்சுக்காரர், அக்கலைக் கோவிலைக் கண்ட போது நான் ஓர் இந்தியனாகவே மாறிவிட்டேன், தாஜ்மகால் உலக விந்தைகளில் ஒன்று என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். நான் கூறுகின்றேன்! அது உலக விந்தைகளில் தலைசிறந்தது!” என்று மெய்ம்மறந்து கூறுகிறார். ஹீபர் என்ற பாதிரியார், “தாஜ்மகாலில் சிற்பக்கலை நுணுக்கம் காணப்படாத இடமே இல்லை. ஐரோப்பியக் கட்டடக் கலைக்கு இஃது ஓர் அறைகூவல்!” என்று வியந்து பாராட்டுகிறார்.

தாஜ்மகாலைக் கண்டு பொறாமைப்பட்ட வெள்ளையர்களும் உண்டு. தங்களுடைய நாட்டில் இத்தகைய கலைக்கோவில் இல்லையே என்ற