18
குண்டூரு ராஜா சொல்லுவது
கொத்துப் பல்லாரியை பாண்டவனே தோத்திர கம்பளத் தோத்திரனே தெச்சன பூமிக்கு சென்றிடவே செப்பினே வென்மன தோப்பவில்லை. ஆனாலுஞ் செல்வதற்குத்தரவு அன்புடன் தந்துதான் கும்பிடுறேன்.
செல்லபொம்முதுரை சொல்வது
கும்பிட்ட கைகட்கு நூறுவிசை கும்பிட்டேன், செல்லுகிறோம் ராஜாவே போற்றிய கைகட்கு நூறு விசை போற்றியே செல்கிறோம் ராஜாவே.
நகர் நீங்கும்போது என்னை யாண்டவளே என்று பாடிக்கொண்டு போதல்-மன்னர் கோட்டை ராஜ சபை
மந்திரியே சர்வ தந்திரியே, வல்லவனே , ரெம்ப நல்லவனே,
தாமதமேனிங்கு காணவில்லை, சங்கதி யொன்றுமே தோணவில்லை.மந்திரி சொல்வது
சங்கதி வேறென்ன செல்லபொம்மு இங்கே வருவதைச் - சாற்றினர்காண்.
சாற்றும் விடைதன்னைக் கேட்டுவந்தேன், போற்றுகிறேன் எங்கள் ராஜாவே.ராஜா சொல்வது
மந்திரி சென்று செல்லபொம்முதுரையை அழைப்பது
கொத்துப் பல்லாரி தேசம்விட்டுக் கும்பிடுந் தெய்வத்தை கூடையிட்டு,
ஆடொடும் மாடுடன் வந்ததினால் அரசனழைக்கிருர் வாருமையாசெல்லபொம்முதுரை என்னே யாண்டவளே என்று பாடிக்கொண்டு போதல்
மன்னார் கோட்டையி லுள்ளவனே மங்களனே தரகங்கணனே தெச்சணம் போகும் வழிதனிலே சீர்த்தியைக் கேட்டிங்கு வந்தோமையா,