உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32



மன்னவன் கப்பங் கொடுத்திடவோ வையகத்தார்கள்
நகைத்திடவோ?
எம்மை வரவேண்டாமென்று சொன்னாலிங்கே எதற்கு வாரமையா?
இங்கே எதற்கு வாரமையா, இப்போதே நாங்களும்
போறோமையா.
சின்னவயது பெரிதாகிச் சீமையெல்லாங் கட்டியாளுவதும்
வாழ்ந்தவர் தாழ்ந்தவ ராகிறதும் வையகத்தைய மெடுப்பதுவும்
யார் செயலாலே முடிந்ததையோ, ஆண்டவன் செயலை யல்லாது ?
எமக்குத் தாத்தா நீராகையி லிைங்கே வந்தது கட்டபொம்மு
இப்படியென்று தெரிந்த பின்னாலிங்கே வருமோ கட்டபொம்மு ?

எட்டையபுரத்தில் கையொடு புறப்பட்டு குருமலைச் சார்புக்கு வந்ததும் கொண்ட பொம்முதுரை பயந்து சொல்வது-மேற்படி சந்தம் கொண்டபொம் முதுரை சொல்வது

சக்கம்மாள் பாதவிசேஷ மதால் சந்ததியாய் வந்த கட்டபொம்மு
எட்டைய புரத்து ராஜாவா லேற்பட்ட காவலி தாகையினாவட
பண்டைப் பழக்கங்களில்லை சண்டை பிடித்தன ரென்மகனே
நாமினி வாழ்வது செக்கர் நகர் நண்ணிடத்தாமதஞ் செய்ய
வேண்டாம்

இவ்விதம் சொன்னவுடன் கட்டபொம்முதுரையுடன் இசைந்து ஆடுமாடுகளுடன் புறப்பட்டு செக்காரக்குடி போதல் ஆண்டவளே என்று பாடவும்-மேற்படி சந்தம்

கம்பளத்தார் வரவேற்பு

ஆண்டவனே எங்கள் ராஜாவே அன்புட னெல்லோருங் கும்பிடுருேம்
எவ்விடஞ் சென்றாலும் வந்த பின்னாலினத்தி லோடயே சேரவேண்டும்
என்ற பழங்கதைபோல வந்தீரெங்களை ரட்சிக்குந் தாதாவே
எங்கள் குடிசுடனுங் களுக்கும் ஏற்ற குடி சில மைத்திடுவோம்.
வேலியிலுள்ளே பயிர்போலும் மேகத்திலுள்ளே மழைபோலும்.
நாங்களும் நீங்களும் சேர்ந்திருந்தால் ஞாயம் பிறந்திடும் பூமியிலே