33
கம்பளத்தார் வரவேற்பால் காலங்கழிக்கையில் கொண்ட பொம்முதுரை காலஞ் சென்ற பின்னர் கட்டபொம்முதுரை ஊமைத்துரை அதிக பராக்கிரமமான காலமுண்டாதல் என்னை யாண்டவளே என்று பாடவும்-மேற்படி சந்தம்
(பராக்கிரமம்)
தம்பிதம்பி ஊமைத்துரை சக்கம்மாள் வாக்கு விசேஷமதால்
வேந்தரெல்லாம் நம்மைப் போற்றவேணும், வெற்றிக் கொடியினை
நாட்டவேணும்.
மன்னவரெல்லாம் போற்ற வேனும், மானிடர் கெர்வத்தை
- மாற்றவேணும்.
பூமி பணங்களை சேர்க்கவேனணும், போரினிற் கியாதி யடைய
- வேணும்.
கிராமாதி காரங்கள் செய்யவேனும், கிரீடம் புனைந்தரசாள
வேணும்.
ஈட்டிபாலா எடுக்கவேனும், எப்போதும் கோபத்தைக்
காட்டவேணும்.
வெற்றி தோர்வைகள் பார்க்கவேணும் வீணான கார்யத்தைப்
போக்கவேனும்,
தொண்டைக் குழியிலுயிரிருந்தால் தோக்கல வார்குலம் சாகாது.
தோக்கல வார்குல கம்பளத்தைச் சொத்தப் படையாகச் சேர்க்க
வேணும்.
சொந்தப் படையோடு வந்தபடைகளுந் துணைப்படையாகச்
சேர்க்கவேணும்.
இந்தப்படி நாமள் செய்தோமானால் ஏதுநமக்கெதிர் பூமியிலே?
ஊமைத்துரை பராக்கிரமம்
துரத்தேர் மாதரி மாதரிச் சோ தொண்டர்க்குத் தொண்டனானூமத்துரை.
ஊமைத்துரை யென்றென் பேரைச் சொன்னாலூக்கம்
பிறக்குமே மற்றவர்க்கு. கட்ட பொம்மென்று பேரைச் சொன்னால் கண்டவர் நெஞ்சம்
திடுக்கிடுமே
சக்கதேவி யென்று பேரைச் சொன்னாற் சங்கடமோடுமே காதவழி,
32. தோர்வை தோல்வி (பா. வ. நெல்லே)
38. உருது வசைச்சொல். 5ー3