உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36



பற்றிய கையுடன் வந்ததனால் பாதர்வெள்ளையென்று கூப்பிடுவேன்.
கூப்பிடுவேன் பாதர் வெள்ளையென்றே கொடுத்தபட்டம் நிலைத்திடவே

கட்டபொம்முதுரை வெள்ளையன் வரலாற்றைக் கேட்டுத் தம்பியுடன் சென்று அடையாளம் போட்ட இடத்தில் கோட்டை போடுகிறது மேற்படி சந்தம்-கோட்டையின் பெருமை

வாய் பேசாப் பாண்டியா ஊமைத்துரை வல்லபம் பார்க்கலாமுள்ளவரை:
கோட்டையலங்காரம் பார்க்கையிலே கொண்டலுறங்கிடும்
பாங்குறவே.

வானத்திலே கொடிவீசையிலே வந்தனஞ் செய்யுமே காற்றினங்கள்
மேகத்திலே கொடிவிசையிலே நீர்த்துளி வீசிடுமே,
தேவபுரி சென்று பார்க்கையிலே சிந்திடுமே நவரத்தினங்கள்
எங்கும் விளம்பரஞ் செய்யயிலே ஏங்கிடுவார் பயமோங்கிடவே
சந்திரரோடிய பாதையிலே தடைகள் செயதிடுங் கோட்டையது,
சூரியரோடிய பாதையிலே துணிவு பேசிடுங் கோட்டையிது.

கோட்டையிட்டு ஆயிரங் கம்பளம் நூறுபரிவாரத்துடன் அரசு செய்யப் போகிற சமயம் கட்டக்கருப்பணன் சுந்தரலிங்கம் சரண் புகல்-மேற்படி சந்தம்

தோக்கலவார் குலபார்த்திபனே தொண்டன டைக்கலஞ்
சேரவேண்டும்.
பாலனடைக் கலஞ்சேரவேண்டும், பார்வையிற் சேவகஞ் செய்ய
வேண்டும்.
சேவக வேலையுந் தந்தாக்கால் திக்கு விஜயம் புரிந்திடுவேன்
கெவுணகிரிப்பள்ளி புண்ணியத்தால் கீர்த்தி கிடைத்தது ராஜாவே.

கட்டபொம்முதுரை சொல்வது-மேல்படி சந்தம்

சக்கம்மாள் வாக்குப்பலித்ததடா சந்ததி போல்வந்த சுந்தரலிங்கம்
பாஞ்சாலி வாக்குப் பலித்ததடா பாலனைப்போல் வந்த சுந்தரலிங்கம்.

88. வெள்ளையதிகாரிகளின் வருணனைகளிலிருந்தும், தற்காலம் நடைபெற்ற அகழ் வராய்ச்சிகளிலிருந்தும் இக்கோட்டை மண் கோட்டையென்பதும், மிக சிறியதென்பதும் விளங்குகிறது. ஆனால் வீரத்தால் புகழ்பெற்றவர்கள் பாதுகாத்த கோட்டையாதலால் இதனைப் புலவர், இராவணன் கோட்டையைக் கம்னும், அருணாசலக் கவிராயரும் வருணிக்கும் பாணியில் வருணிக்கிறார்,