உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

கட்டக் கருப்பணன் சுந்தரலிங்கமென மட்டிலாப் பேருங்
கொடுத்தேனடா
ஆயிரம் கம்பளம் நூறுபரிவார மதற்கு நீ யொருவீரனடா

தானாபதி சரண் புகல்-மேற்படி சந்தம்

வாருங்கோ வாருங்கோ பிள்ளை மகனே உன் வல்லமையாவையுங்
கூறுமையா
கங்கை குலத்திலுதித்தவரே காரணம் யாவையுங் கூறுமையா

தானாபதி சொல்வது-பல்லவி

நாட்டினிலுள்ள கணக்குகள் யாவும் நலத்தில் முடித்திடுவேன்
நாடாலோபர் 30 களென் றாலுங்கல் நார் போலுரித்திடுவேன்
நஞ்சைப் பகுதிகள் புஞ்சைக் கிடுவதும்
புஞ்சைப் பகுதிகள் நஞ்சைக் கிடுவதும்
நாணயஞ் சேர்ப்பதும் என்னால்தான்.
நாடகத் தீர்வையும் ராகத்தீர்வையும்
லாபத்தீர்வையும் நாலாத்தீர்வையும்
நயங் கொண்டெழுவ தென்னால்தான்.
லஞ்சந் தரவிலை யென்று தெரிந்தால்
ராஜனென்றாலும் யோஜனை செய்யேன்.
நயந்து கெடுப்பது மென்னால் தான்
நட்புடன் வந்தவரென்று தெரிந்தால்
நஷ்டந் தெண்டத்தீர்வை கொடுத்தபின்
ஞாயம் பிறப்பது மென்னால்தான்.
மிஞ்சு மனாதிபுரம் போக்குண்டதில்
விரும்பிய தர்க்காஸ்த்துந் தருவேன் பின்
விரட்டியடிப்பது மென்னால்தான்
விள்ளவர் கரியவர் சுப்ரமணிய
பிள்ளை யென்றுரைப்பதும் பிரியப்படுவதும்
மேல்யோசனைகளும் என்னால்தான்.
விபரீதம் பல புரிவா மெனிலவர்
குடிபோகுங் கெதி தெரியாது எனக்
கதிகாரங் கொடுத்திடு வீரேலெந்
நாட்டையுமோர் கைக்குட் சிக்கச் செய்வன்
நம்பிக்கையோடுனைப் பாதுகாப்பேன்
நம்பிக்கையோடுனைப் பாதுகாப்பேன்.
ராஜாவே என்னையு மாதரிப்பீர்

39. லோபர்-உலோபி, கஞ்சன்