39
துப்பாக்கிக் குண்டுள்ள நாளையிலே துன்பம் பிறக்குமோ
மற்றவர்க்கு ?
பாஞ்சைப் பதியிலே கட்ட பொம்மு பயம் பிறந்தது பூமியிலே.
வாய் பேசாதவனூமத்துரை வல்லபம் பேசிட மார்க்க முண்டோ?
நம்பின எங்களுக்கும்மாலே நன்மை பிறந்திட வேண்டுமையா.
அண்டின பேர்களுக்கும்மாலே அச்சந்தவிர்ந்திட வேண்டுமையா.
அந்தரங்கக் கடிதம் சென்னை க்கு மேன்மேலும் போகிறதால் அங்குள்ள மேலான துரைமார்களுக்குக் கோபம் பிறந்து ஜில்லாக் கலைக்டர் சாகீஷன் மேசர் துரைக்கு உத்தரவு கொடுக்க அதையறிந்த கலைக்டர் கட்டபொம்முதுரைக்கு குற்றால மீட்டிங்கியென்று கடிதம் எழுதுதல்-மேற்படி சந்தம்
தானாபதி என்ற சண்டாளா, தப்பிதஞ் செய்திடுங் கட்டபொம்மு,
நாட்டுகிடைஞ்சல் இழைத்ததனால் ஞாயங் கிடைத்திட வேண்டு
மென்ருர். சீமைக் கிடைஞ்சல் இழைத்த தல்ை ஜெயங்கிடைத்திட வேண்டு
மென்றார்.
ஞாயங்கிடைத்திட வேண்டுமென்றால் நாமுமவர்க்கருள் செய்ய
வேண்டும்.
ஆகையினாலே காகிதங்களடிக்கடி வரப் பார்த்ததினால்
குற்றாலத்து மீட்டிங்கிக்குக் கொற்றவனே வரவேண்டு மயைா.
இந்தக் கடிதம் கண்டவுடன் ஊமைத்துரை பராக்ரம எண்ணத்துடன்
இப்போதே பார்க்கவேண்டு மெனத் தனது படைவீரர்க்கு அறிக்கை
செய்ய அவர்கள் வந்து சேர்தல்-மேற்படி சந்தம்-படைவீரர் பெயர்
முத்துக் கருத்தையாவுஞ் சிவத்தையாவும் முட்காட்டு சூரனுமோடி வநதான் கொட்டமடக்கி, பெரியகோடாலி, குமரய்யா, சின்னக் கோடாலி, சித்தன். சித்துளியுங் கண்ட கோடாலி, நல்ல சேர்வைக்காரர் சிவத்தையாவும், சின்னத்தளவாய், புலிகுத்தி நாயக்கர், சில்லவார் கம்பளஞ் சேருவையும், சின்னணன், வீரணன், பொன்னையாவும் சின்னம நாயக்கன், பாதர்வெள்ளை, காவற்காரன் மகன் கோபக்காரன் கண்ட இடமெல்லாம் சண்டைக்காரன், சாமிநாயக்கன், கெட்டிக்கவுண்டன், சாவற்கட்டிலே கெட்டிக்காரன்.