45
என்னம்மா என்னம்மா சக்கம்மாளே என்ன குறைவுகள் செய்
தோமம்மா?
ஒருகுறைவுமே செய்யவில்லை உண்மையுடன் காக்க வேண்டுமம்மா.
காட்டிக் கொடுக்காதே சக்கதேவி, கண்பார்க்க வேண்டுமே
இப்பொழுது
போக வழியில்லை கோட்டையிலே, பொல்லாத வஞ்சனை
செய்ததனால்
போக வழிதரவேண்டுமம்மா பொல்லாத வஞ்சகம் நீங்கிடவே.
சக்கம்மாள் தயவினால் மனம் குதூகலிக்க உடனே கோட்டையை நீங்கி கம்பள வீரருடன் புறப்பட்டு கன்னிமார் கோவிலண்டை வரும்போது தானாபதியைக் காணாமல் வருந்துதல்-மேற்படி சந்தம் கட்டபொம் முதுரை சொல்வது
ஈதென்ன அநியாயம் தானாபதி எங்கே சென்றாரோ பிள்ளை மகன் ?
தானாபதி நமக்கில்லா விட்டால் சங்கதியொன்றும் முடியாது.
பிள்ளைமகன் நமக்கில்லா விட்டால் பின்வருங் காரியஞ் சொல்
பவர் யார்?
நாட்டுக் கணக்கு முடிப்பவர் யார், நமக்குத்தந்திரம் சொல்பவர் யார்?
வருமுன்னறிவான் வெள்ளாளன்,வந்தபின்னறிவான் கம்பளத்தான்.
புலிகுத்தி நாயக்கர் முத்துக்குறியுரைப்பது
முத்துக் குறியினால் தோன்றுதையா முன்னின்று கேளுங்கள்
சங்கதியை,
சிப்பாய் கைகளிற் சிக்கிக்கொண்டான் சென்னபட்டணம் போய்ச் சேர்ந்தான்.
வைது அடிப்பதை யல்லாமல் மன்னனுடம்புக்குச் சேதமில்லை.
திட்டி அடிப்பதையல்லாமல் சென்ற உடம்புக்குச் சேதமில்லை.
பத்து தினங்கள் கழித்ததானால் பக்கத்தில் பார்க்கலாம்
பிள்ளைதன்னை.
எட்டுதினங்கள் சழித்ததாளுல் இங்கே பார்க்கலாம் பிள்ளைதன்னை.
முத்துக்குறி பார்த்து வரும்போது பல காரியங்களைச் செய்து பாஞ்சை வந்த உடனே வெள்ளே யைக் கல்யாணஞ் செய்ய வேண்டுதல்-மேல்படி சந்தம் கட்டபொம்முதுரை சொல்வது
பாதர் வெள்ளையென்று பட்டங் கொண்ட பாலகனே சொல்லக்
கேளுமையா
மாலேயின் கோலத்தைப் பார்க்க வேண்டும் மட்டிலாக்கியாதிய