உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60



யாரைச் சதமென்பேன் பூமியிலே ஐயாவே உன்
துணையல்லாமல் ?
எவரைச் சதமென்பேன் பூமியிலே ஏந்தலே உன்
துணையல்லாமல் ?
ஆவி பதறுதே பார்க்கையிலே அங்கம் நடுங்குதே
பேசையிலே
ஆவி பழுக்குதே சிந்தையிலே ஆக்கமழிந்ததே பாஞ்சையிலே
வாழை பழுக்குதே சோலையிலே மாங்குயில் வாடுதே
- பாஞ்சையிலே.
கூடிக் கலந்திடும் நாளையிலே கோலமழிந்ததே மேனியிலே
வாரி யணைத்திடும் கையாலே மார்பிலடித்திடக் காரணமோ ?
புஷ்ப மணத்திடுங் கையாலே பூமியில் தட்டவும்
- காரணமோ ?
நீங்கள் பிறந்தது வல்லநாடு நீதிபிறந்தது பாஞ்சையிலே
ஆவிதுறந்தது சண்டையிலே ஆண்டவன் என்னெதிர்
வாரதப்போ ?
நாங்கள் மயங்கிய வேளையிலே நாயகனென்றெதிர்
வாரதெப்போ ?
வீரம்பிறந்த வல்லநாடு வெற்றியடைந்தது பாஞ்சையிலே.
சாமிபிறந்தது வல்லநாடு தங்கம் பிறந்தது வல்லநாடு
தங்கம் மயங்கிய வேளையிலே சாமி நீ என்னெதிர்
வாரதெப்போ ?
உன்கட்டை சந்தணக்கட்டையிலே ஓங்கிய தீயினில்
- வேகையிலே
என்கட்டை தங்கமா உன்னுடன் இன்றே உடன்கட்டை
ஏறாமல்.

கட்டபொம்முதுரை வெள்ளையனிறந்த உடன் ரொம்பக் கவலை யடைந்து பதிலாள் தேடப்புறப்படல்-மேற்படி சந்தம் கட்டபொம் முதுரை சொல்வது

தம்பிதம்பி ஊமைத்துரை சங்கடம் நேர்ந்ததைப்
பார்த்தனையா ?
மட்டில்லா வெள்ளையன் போனபோதே வல்லபம்பேசவு
 மார்க்கமுண்டோ ?
கோடிதவங்கள் செய்தாலுங் கொற்றவன் போலக்கிடையாது

. பேசுகையிலே 61. தங்கம்-வெள்ளையம்மாள் தங்கமென்று தன்னேக் குறிப்பிடுகிறாள். அவள் பிறந்த ஊரும் வல்லநாடு.