உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கட்டபொம்மு கூத்து.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

அவ்விதம் சொன்னவனை ரச்சித்து67 சொல்லால் பச்சித்து 68 வடக்கே புறப்பட்டுப்போக மழையதிகரிக்க இருவரும் பிரிந்தனர். தம்பியை நினைத்துப் புலம்பல் - கட்டபொம் முதுரை புலம்பல் விருத்தம்

பாஞ்சையில் கோட்டை யிட்டோம் பக்தியால் சக்கதேவி,
வாஞ்சையிலரசு செய்து வாழ்ந்தநாள் முதலின்றாக,
நாம்சனம் பிரிந்ததில்லை நம்பின என்னை நீங்கி
போஞ்செயல் தெரிகிலேனே பூபதி என்செய்கேனே

தன்னனச் சந்தம்

என் பிறப்பே அய்யா ஊமைத்துரை எங்கே சென்றாயோ
ஊமைத்துரை வானமுழங்கையிலே திகைத்து மற்றவழி கூடிப்போயினையோ? மேகமுழங்கையிலே திகைத்துவேறு வழிகூடிப் போயினையோ?
மின்னல் பளிரெனமாரி பொழிந்திடும் வேளையிலே
புத்திமாறினதோ?
எங்கே தேடுவேன் பூமியிலே எவரைக் கேட்பது பாண்டியனே?
கால்கள் தள்ளாடு தூமைத்துரை, கண்களிருட்டுதே
பாண்டியனே.

கட்டபொம்மு துரை புலம்பிக் கொண்டு தொண்டைமான் புதுக்கோட்டை சேர்ந்தவுடன் அங்கே பிடி படல் - தொண்டைமான் புதுக் கோட்டை ராஜா சபை

மந்திரிகளே ஓடி வாருங்களே வந்து என் வார்த்தையைக்
கேளுங்களே.
தந்திரிகளே ஒடி வாருங்களே சங்கதிநான் சொல்லக்
கேளுங்களே.

மந்திரிகள் சொல்வது

என்ன உரைத்தாலும் கேட்பதல்லா லெதிர்த்துப் பேசிட
வார்த்தை யுண்டோ ?
எதிர்த்துப்பேசிட வார்த்தை யுண்டோ எவ்வித உத்தரவுங்
கொடுப்பீர்,

ராஜா சொல்வது

பாஞ்சைப்பதிமன்னன் கட்டபொம்மு பட்டுக்கொண்டான மதிஷ்டப்படி,

67. ஆதரித்து 68. பட்சம் பாராட்டி கー5