பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. இனிய தமிழும் இஸ்லாமியர்களும்

பசுந்தமிழ் பண்டும் இன்றும் என்றும் ஏற்றம் பெற்று வந்தமைக்கும், வருகின்றமைக்கும், வரப்போகின்றமைக்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றுள் தலையாய ஒன்று, தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழர்கள் தாம் தாம் எம்மதத்தினராயினும், தமிழ் மொழியைப்பேணி வளர்த்திருக்கின்றமையே என்று அறுதியிட்டு உறுதியாகத் கூறிவிடலாம். இந்நோக்கங்கொண்டு உழைத்திலரெனில், நாம் நம் பழம் பெரு இலக்கியங்களாகிய பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலான சங்க மருவிய நூற்களைப்பெற்று இருக்க இயலாது; பழம்பெருமையையும் அறிந்திருக்க இயலாது. இச்சங்கமருவிய நூற்களைத் தந்தவர்கள் ஒரு குலத்தவர்கள் அல்லர். ஒரு சமயக் கொள்கையினர்கள் அல்லர். வெவ்வேறு குலத்தவர்களும் சமயத்தவர்களுமே ஆவர். அன்னார் அமைத்த இலக்கிய அணிகலன்களையே தண்டமிழ் அணங்கு தாங்கி நிலவி வருகின்றாள். இங்ஙனமே தமிழ் மகட்குப் பணி பூண்ட பிற்கால இஸ்லாமியர்களும் எம்முறையில் தம் கடனை ஆற்றியிருக்கின்றனர் என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் ஒருபுடை நோக்கமாகும். பற்பல தமிழ்ப் புலவர்கள் இஸ்லாமியர் இனத்தில் பெருகத் தொடங்கினர். இஸ்லாமிய சமூகத்தவரைத் தமிழ் மொழி தன் இனிமைப் பண்பினால் ஈர்த்துவிட்டது. இதனால்தான் தாமாகக் கவிபுனையும் நிலையிலும் பல புலவர்கள் அச்சமூகத்தில் தோன்றத் தொடங்கினர்

இங்ஙனம் புலவர் திலகங்களாக இருந்தவர்களின் வரலாற்றுக் குறிப்பினையும் அன்னார் யாத்த