பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/109

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104



 “குமரி இருக்கக் கலாமயில் கூததயர்
குளிர்புனம் மொய்த்திட்ட சாரலில்போயக்
குறவர் மகட்குச் சலாமிடற் கேக்கறு
குமரனை முத்துக் குமரேசனைப் போற்றுதும்”

என்பது.

பட்டினத்தார் பாடலிலும் “குலாம்” என்னும் இந்துஸ்தான் மொழி காணப்படுகிறது. “கொடுக்க அறியாது இறக்கும் குலாமர்க்கு என் சொல்வேன்” என்ற அடியில் காண்க. இப்படிச் சில எடுத்துக் காட்டுக்கள் உண்டு.

இங்ஙனம் எம்மதத்தினரும் ஒற்றுமையுடன் தமிழ் நாட்டில் நிலவித் தமிழ்மொழியினைப் பேணிப் போற்றி வந்தனர் என்பதை நாம் உணர்கையில், நாமும் நம்தமிழ் அன்னைக்கு நம்மாலான தொண்டினைச் செய்யக்கடமைப் பட்டுள்ளோம் என்பதை மறவாமல், ஆவணசெய்தற்கு அரும்பாடுபடுவோமாக.