பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119


‘’நாவிற் றிருந்த புலமா மகளோடு நன்பொன்
பூவிற் றிருந்த திருமா மகள் புல்ல நாளும்‘’

என்று குறிப்பிட்டுத் தொடங்கியதினின்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு இவை இரண்டும் மிகமிக இன்றியமையாதவை என்பதைத் தேவர் வற்புறுத்தி இவை விளக்க முற்றுப் பெருகுதற்கானவழி வகைகளை காட்டு ஆட்சியாளரும் பொது மக்களும் நாட வேண்டும் என்பதை அறிவுறுத்துகின்றார்.

கல்வியறிவு நிரப்பப் பெற்றவர், தாம் வாழும் நாட்டிற்கு ஆக்கம் தேடுவரே அன்றி, அழிவைத் தேடார்; வாளா இருக்க ஒருகாலும் ஒருப்படார். செடிகளை நட்டுச் சிறக்க வாழ்வர். இம் முறையே பண்டைய முறையாகும். இதனை நாம் செய்யாது மறந்ததனால் அன்றோ, பசியும் வறுமையும் கொண்டு இந் நாள் வாடி வதங்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம்: நடுதற்கும் வளர்த்தற்கும் முன் வராவிட்டாலும், அழித்தற்கு முன் வருவதுதான் வருந்தத்தக்க செயலாகும். வீடு கட்டுதற்கும், சூளை இடுதற்கும், காற்றும் நிழலும் கனியும் தரும் தருக்களை வெட்டி வீழ்த்துநரைக் காணின், எத்துணைத்துன்பம் உண்டாகிறது? ஏன்சினமும் எழுகின்றது! அந்தோ! அவர்தம் அறியாமை என்னே! மரஞ் செடி கொடிகளின் அடர்த்தி நாட்டுவளத்திற்கு அறிகுறிஅன்றோ? மேகக் தவழ்ந்து மழை சொரிதற்கு மார்க்கமன்றோ ? இதனாலன்றோ இன்மொழிப்புலவர்யாவரும் தத்தம் நாட்டை வருணிக்கும் காலத்து, மரஞ் செடி கொடிகளை மாண்புறப் பாடத் தொடங்கினர்: அவை செறிந்த நாடே நாடு என்பதை அறிவுறுத்த அன்றோ திருத்தக்க தேவரும்,

காப்மாண்ட தெங்கின் பழம்வீழக்
கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறிப்
வருக்கை போழ்ந்து