பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மல்லல் மாநகர்ச் செல்வமும் வார்கழல்
செல்வர் செல்வமும் காணிய என்பர்போல்
எல்லியும் இமையார் .

ஈண்டு எல்லி என்னும் சொல்லை இரவு பகல் என்னும் இருபொருள் தரும் முறையில் அமைத்துப் பாடிய சிறப்பைக் காண்க.

நாடென நவிலப்பெறும் பேறுபெற வேண்டும் மாயின், எல்லா நலனும் வளனும்ஒருங்கே பொலிதல் வேண்டும். எவர் எதைவிழையினும் அதைத் தரும் நாடே நாடு. அறவோர்க்கு இடம் தரும் நாடே, துற வோர்க்கும் இடந்தருதல் வேண்டும். வறுமையால் சிறுமையுற்று வாடி வருவார்க்கும் இடம் தந்து, இழந்த பொருளை ஈட்டுதற்கும் ஏற்ற வசதிதருவதாய் வாய்ந்ததே நாடாகும். இன்னோரன்ன இயல்புடைய நாட்டையன்றோ தேவர் நமக்குக் காட்டுகின்றார் ?

"நற்ற வம்செய் வார்க்கிடம் :
தவம்செய் வார்க்கு மஃதிடம்
நற்பொருள்செய் வார்க்கிடம் :
பொருள்செய் வார்க்கு மஃதிடம் :
வெற்ற இன்பம் விழைவிப்பான்
விண்ணு வந்து வீழ்ந்தென
மற்ற நாடு வட்டமா
வைகும் மற்ற காடரோ."

என்று கூறியும் குதூகலிக்கிறார்.

இவ்வாறு தேவர் வகுத்துத் தந்த காட்டின் இயல்பை ஏனைய நாடுகள் அமையப் பெறுதற்கான வழிவகைகளே நாடுதற்கு அரசியலார் முந்தவேண்டும். இ.து அரசியலார் பணி, என்று பொதுமக்கள் வாளா இருத்தல் அன்றி அவ்வரசியலாருடன் ஒற்றுமைகொண்டு உழைக்கவும் வேண்டும்.

"தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு."