பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13. பெருமை

நாட்டில் வாழும் மக்கள் நற்குடிப் பிறப்பினராய்த் தாம் பிறந்த குடி தாழ்வுறாதிருக்கச் செய்து உயர்த்தவல்லவராய், மானமுடையவராய் இருத்தல் வேண்டும். மக்கள் மானத்துடன் இருப்ப தோடன்றிப் பெருமையோடும் தம் வாழ்க்கையை நிலைநாட்டி நன்முறையில் நடக்க வேண்டும்.

பெருமையோடு வாழ்தலாவது, செயற்கரிய செயல்களைச் செய்தும், செருக்கு இல்லாமலும், பிறர்மீது குற்றம் கூருமலும் வாழ்தலாகும். இம் மூன்று பண்புகளும், உள்ள நிலையினும் மேல் மேல் உயர்த்தும் பண்புகளாகும். ஒருவனது உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணம் அவனே அன்றிப் பிறர் இல்லை.

நன்னிலைக்கண் தன் ஆன நிறுப்பானும் தன்னை
நிலைகலக்கிக் கீழ் இடு வானும்-நிலையினும்
மேன்மேல் உயர்த்தி நிறுப்பானும் தன்னைத்
தலையாகச் செய்வானும் தான்.

என்று நாலடியார் கூறுவதாலும் இதனே நன்கூண்ரலாம்.

'ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை' என்பர் வள்ளுவர். அதாவது, ஒருவனுக்குத் தான் இருக்கின்ற காலத்தும் மிக்குத்தோன்றுதல் உடைமை. அதாவது பிறரால் செயற்கரிய செயல்களைச் செய்வோம் என்னும் ஊக்கம் மிகுதி. இவ்வாருன மிக்குத் தோன்றுதலாகிய பண்பு மக்களுக்குத் தேவை.

செயற்கரிய செய்தலாவன, அளவு கடந்து உபகாரம் செய்தலும், ஈகைக்குணம் உடைமையும்