இனித் தலைவியின் தன்மையை எவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்பதையும் சிந்திப்போமாக. பெண்களுக்குப் பிறப்புரிமையாய் இருப்பது நாணம். இந்த நாணத்தை அவர்கள் உயிரினும் சிறந்ததாகக் கருதுவர் என்பது நம் முன்னோர் கருத்து. ஆனால், அதனினும் சிறந்ததாகப் பெண்கள் கொள்ள வேண்டியது கற்பு என்பதை அறிஞர்கள் அறிந்து கூறியதை நாம் சிந்திக்கும்போது பெண்களுக்குரிய பொறுப்பு அளவிடற்கரியது என்பது புலனாகும். இல்லையானால் ஒல்காப் பெருமை வாய்ந்த தொல்காப்பியனார்,
“உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
என்று விதி வகுக்கமாட்டார். இதனைக் கருத்துள் கொண்ட ஆசிரியர் தலைமகள் இலக்கணத்தை இயம்புகையில்,
“தாயிற்சிறந்தன்று காண்தைய லாருக்கங் நாண்தகைசால்
வேயிற் சிறந்தமென் தோளிதிண் கற்பின் விழுமிதன்றீங்
என்று கூறி அவளது இயற்கை எழிலால் புறப்பண்பையும், கற்புச் சிறப்பால் அகப்பண்பையும் நன்கு விளக்கியுள்ளார்.
இவ்விரு கோவைப் பாடல்களால் தமிழ்நாட்டுத் தலைவன் தலைவியர் எவ்வாறு இலகினர் என்பது நமக்கு நன்கு புலனாகின்றது. இங்ஙனம் நலத்தாலும் குணத்தாலும் ஒற்றுமைப்பட்ட தலைவன் தலைவியர் வாழ்க்கையில் இன்ப துன்பங்கள் இருவர்க்கும் ஒன்றாகவே. அமையுமே அன்றி, ஏற்றத்தாழ்வாக அமையா என்பதை நன்கு விளக்கவே மணிமொழியார்,
கரகத் திருக்கண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர்
க-3