பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யில்நம் தொண்டர் புராணமாம் பெரிய புராணத்தையும் இணைத்து,

வள்ளுவர் நூல் அன்பர்மொழி வாசகம் தொல்காப்பியமே
தெள்ளுபரி மேலழகர் செய்தவுரை-ஒள்ளியசீர்த் தொண்டர் புராணம் தொகுசித்தி ஓராறும் தண்டமிழின் மேலாங் தரம்.

எனப் பாடியும் உள்ளார். சேக்கிழார் மாண்பினே உணர அவாவுவார் சேக்கிழார் புராணத்துள்ளும், சேக்கிழார் பிள்ளைத் தமிழிலும் பரக்கக் காணலாம்.

வடநூற்கடலும் தொன்ற்கடலும் ஒருங்கே நிலை கண்டுணர்ந்து அறிவுமயமாய்த் திகழ்ந்த சிவஞான முனிவர்தம் வாயார,

தூக்கு சீர்த்திருத் தொண்டத் தொகைவிரி வாக்கினால் சொல்ல வல்லபிரான் எங்கள் பாக்கி யப்பய னாப்பதி குன்றைவாழ்
சேக்கி ழானடி சிங்தை இருத்துவாம்.

எனப்பாடிப் பரவியுள்ளார். மற்றும் சேக்கிழார் பெருமை பலவாகும். இவரது நுண்ணறிவுத்திறன் காண விரும்புவோர் இவர் பாடியுள்ள பெரிய புராணத்தில் கண்டுகளிக்கலாம். இவர் வாழ்ந்த காலம் அனபாயச்சோழனாகிய இரண்டாம் குலோத்துங்கன் காலம். அதாவது கி. பி. 1123 முலல் 1148 வரை அவன் அரசு புரிந்தகாலமாகும். மேலும் தெள்ளத் தெளியக் கூறப்புகின் கி. பி. 12-ஆம் நூற்றாண்டு எனலாம், இனிக் கம்பரது பெருமையைச் சிறிது காண்போமாக.

கம்பர் ஒரு சிறந்த கவி. "கல்வியில் சிறந்தவர் கம்பர்." "கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும்". "கம்பநாடன் கவிதையைப் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே" என்பனபோன்றவை கம்பர் பெருமையை விளக்க வந்தவைகளே.