பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சொல்லொக்கும் கடிய வேகச் கடுசரம் கரிய செம்மல்
அல்லொக்கும் நிறத்தி னாள்மேல் விடுதலும் வயிரக்குன்றக்
கல்லொக்கும் நெஞ்சில் தங்கா தப்புறம் கழன்று கல்லாப்
புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருனெனப் போயிற்

றன்றே

என்றி பாடிக் காட்டினார். இப்பாடலில் இராமனது அம்பு தாடகையின் மார்பகத்தை ஊடுருவிச் சென்று, முதுகுவழியே மின்வேகமாக வெளிவந்துற்றது என்பது கூறப்படுகிறது. அவ்வம்பு மிக்க விரைவுடன் ஊடுருவி. மிக்க விரைவிலும் வெளிவந்துற்றது என்பதை விளக்கவே நல்ல உவமையினைக் காட்டி விளக்கியருளினர் கம்பர், கல்லாதவர்கட்குக் கற்றவர் அறவுரைகளைக் கூறினால், அச்சொற்கள், ஒரு காதின் வழியே நுழைந்து, மற்றொரு காதின்வழியே அப்போதே விடப்படுகின்றன. அக்கருத்துக்கள், அவர்கள் நெஞ்சத்து இருப்பது மில்லை. ஆகவேதான், "கம்பர், கல்லாப் புல்லர்க்கு நல்லோர் சொன்ன பொருளெனப் போயிற்றன்றே" என்றனர். எனவே, இ.:து இராமனது அம்பின் வேகத்தின் மாட்சியினைக் காட்டிய முதல் இடமாகும்.

இனி, அடுத்தாற்போல் இராமனது அம்பின் சிறப்பைக் கம்பர் யாண்டு வைத்து இயைத்துக் காட்டி உள்ளார் என்பதைப் பார்ப்போம்.

இராமன் வாலியின் மார்பில் அம்பினை விடுத்தனன். இராமன் அம்பு எத்தனை வேகமும், வெப்பமும் உடையதாக இருப்பினும், அது வாலியின் மார்பகத்தை ஊடுருவிச் செல்லும் ஆற்றலைப் பெற்றிலது. தன் மீது பாய்ந்த அம்பினை வாலி, தன் இரு கரத்தாலும், இரு காலாலும், ஒரு வாலாலும் பிடித்து, அது யாருடைய அம்பெனக் கூர்ந்து