பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


நோக்கவும் தொடங்கினான். இங்ஙனம் வாலி அவ்வம்பினைத் தன் போக்கில் போகவிடாமல், தடுத்துப் பார்க்கவும் கம்பர் அமைத்தது, பல உண்மைகளை நம்மனோர்க்கு உணர்த்தவேயாம் என்பது உற்று நோக்குங்கால் உணரக் கிடைக்கிறது.

வாலி அம்பைப் பார்த்தான். அவ்வம்பில் இராமன் என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. அச்சொல் எத்தகையது என்பதைக் கம்பர் ஈண்டு உணர்த்த விழைந்தவராய்,

மும்மைசால் உலகுக் கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே இம்மையே ஏழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும் செம்மைசேர் நாமந் தன்னைக் கண்களில் தெரியக் கண்டான் என்று பாடி இன்புற்றார். இந்த உண்மையினை உணர்த்துவதுடன் நின்றாரில்லை கம்பர்.

இல்லறத்தில் ஈடுபட்டவர்கள் இல்லக்கிழத்தியர் இல்லாதபோது, எத்தகைய செயல்களையும் ஆராயாது செய்து விடுவர் என்னும் சீரிய கருத்தினையும் ஈண்டே இயம்ப எண்ணி, வாலி இராமனை நோக்கி, இராமன் தன்னை மறைந்து நின்று அம்பு எய்து வருத்தியது அடாது என்பது குறித்து ஏசிப் பேசும் நிலையில், அவன் கூறியதாக,

"கோவியல் தருமம் உங்கள் குலத்துதித்தோர்கட்கெல்லாம் ஒவியத் தெழித ஒண்ணு உருவத்தாய் உடைமை அன்றோ ஆவியைச் சனகன் பெற்ற அன்னத்தை அமிழ்தின் வந்த தேவியைப் பிரிந்த பின்னர்த் திகைத்தனை போலும் செய்கை' என்று பாடினார்.

முதல் இரண்டடிகளில் இராமனது அழகையும், குலப் பெருமையினயும் வாலி வருணித்துக் காட்டிய தன் நோக்கம், உடம்பு அழகு இருக்கின்றதேயன்றி,