பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை
மனச்சிறையில் கரந்த காதல்
உள்ளிருக்கும் எனக்கருதி உடல்புகுந்து

தடவியதோ ஒருவன் வாளி

என்னும் பாடல் அறிவித்து நிற்கும்.

ஆகவே, இப்பாடலில் அம்பு பல துளைகள் துளைத்தமைக்குக் காரணம் தெள்ளத் தெளிய உணர்த்தப்பட்டுள்ளது. ஒன்று இராவணன் உயிர் யாண்டுள் ளது என்பதைத் தேடு தற்கும், மற்றொன்று சீதைமாட்டுக் கொண்டிருந்த காதல் உணர்ச்சியாண்டு நிலைத்திருந்தது என்பதற்கும் ஆகும்.

கம்பர் ஆரண்ய காண்டத்தில் இராவணன் சீதையினைத் தன் உளமாகிய சிறையில் அடைத்து விட்டான் என்பதை,

மயிலுடைச் சாய லாளை வஞ்சியா முன்னம் நிண்ட
எயிலுடை இலங்கை வேந்தன் இதயமாம் சிறையில்

வைத்தான்

என்று பாடினர்.

இங்ஙனம் இதயம் புகுந்த சீதா பிராட்டியினை விடுதலை செய்ய வேண்டியது கம்பர் கடமையாகிவிட்டமையின், அச் சிறைவீடு செய்யும் காரணத்தால் அவனது மார்பு, இதயம் பல துளைகளையுறுமாறு கம்பர் ஈண்டுப் பாடியமைத்து, இராமனது அம்பின் அருஞ்சிறப்பினை எடுத்துக் காட்டுவாராயினர்.

வானக வம் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டதாயினும், அவ்வம்பின் மாட்சி தோன்றும் இடங்கள் மூன்றாகும். சேக்கிழார் பெருமானாரும் உலகெலாம் என்னும் அருள் வாக்கினைத் தம் நூலில் பல இடங்களில் அமைத்துப் பாடி இருப்பினும்.