பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னர் எடுத்துக் காட்டப்பட்ட மூன்று இடங்களில் அமைந்த உலகெலாம் என்னும் தொடரையே அறிஞர் பெருமக்கள், யாவர்க்கும் அறிவித்து வருவர். அது போலவே கம்பரும் இராமனது அம்புக்குப் பல இடங்களில் வேலை தந்திருப்பினும், மேலே கூறிய மூன்று இடங்களில் தான் அதன் சிறப்பை எடுத்துக் காட்டித் தாமும் சேக்கிழாரை யொட்டி நடந்தமையினை ஊகித்துணர்வார்க்கு உணர்த்துவராயினர். ஆகவே, தமிழ் மக்களாகிய நம்மனோர் கடமை இவ்விரு நூற்களையும் நன்கு ஓதி அவற்றின் கவி இன்பங்களையும் துய்த்தலேபயன் தருவது ஆகும்.