கிறித்தவர் தமிழ்த் தொண்டு I();
வீரமாமுனிவர்க்குத் திருக்காவலூர்த் தலத்தில் டுபாடு மிகுதியும் இருந்தது. இதனே இவர் பாடி புள்ள,
தாள் அணிந்த மதிமுதலாத் தமியனும்அக்
கமலத்தாள் தாங்கி லேனே கோள்அணிந்த குழல்அணிதார் குடைவண்டார்
புகழ்பாடி மது உண் ணேனே வாள்அணிந்த வினைப்படைவெல் வலிச்சிங்கம்
ஈன்றஒரு மானுய் வந்தாள் கேள்அணிந்த காவல்நலூர்க் கிளர்புனத்துப்
பசும்புல்லாய்க் கிடவேன் நானே
என்னும் பாடலால் உணரலாம்.
இந்தச் செய்யுளே உற்று நோக்கும்போது, குலசேக ாழ்வார் திருமொழியாம்,
வானளும் மாமதி.போல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம் கோளுகி வீற்றிருந்து கொண்டாடும் நெறியறியேன் தேனர்பூஞ் சோலேத் திருவேங் கடமலைமேல் காருைய்ப் பாயும் கருத்துடையேன் ஆவேனே
என்பதை அடி ஒற்றியது என்பது புலனுகின்ற தன்ருே ?
இதுவரை மேலேகாட்டுக் கிறித்தவப் பெருமக்க ளுள் தமிழுக்கு அரும்பெருங் தொண்டுபுரிந்த ஒரு வரைப் பற்றி அறிந்தனம். அடுத்துத் தமிழகத்துப் பிறந்து கிறித்தவச் சமயத் தொடர்புகொண்டு தமிழ் மொழிக்குப் பணிபுரிந்த ஒரு பெரியாரைப்பற்றிப் பார்ப்போமாக.