செல்வத்தின் சிறப்பு 111
தைச் செலுத்துதல் உலகில் நடை முறையாக இருக் நிறது. அறம் பொருள் இன்பம் என்னும் வைப்பு முறை பில் பொருளே நடுநாயகமாகத் துலங்குகிறது. இந்த நடுநாயகமாகிய பொருள் கைவரப்பெறுமானல், இதற்கு முன்னும் பின்னுமுள்ள அறமும் இன்பமும் தாமே வந்து இயையும். இப்பொருள் இன்றேல் துன்பமே இயையும். இத்துணைக் கருத்துக்களையும் உள் அடக்கி காலடியார் என்னும் நூல்,
வடுவிலா வையத்து மன்னிய மூன்றின் நடுவண தெய்த இருதலையும் எய்தும் நடுவண தெய்தாதான் எய்தும் உலேப்பெய்து அடுவது பேர்லும் துயர்
என்று இயம்புகிறது.
பணவிடு தாது இப்பணத்தைப் பற்றிப் பலப்படி புகழ்ந்துள்ளது. அது பணத்தை,
பணமே எனப்படைத்த பாக்கியவானே வங் கணமேனன் ஆருயிரே கண்ணே-குணநிதியே கோலம் பலனடுத்துக் கோவேங் செய்யும்இந்ர சாலம் பிறர் அறியத் தக்கதோ-ஞாலமிசை பணம்என்று உன்னைப் படைக்காத சென்மம் பிணம்என்பர் கண்டாய் பெரியோர்
என்று கூறுதலேக் காண்சு.
இ ன் னே ர ன்ன மாண்புகட்குக் காரணமான பணத்தை எவ்வழியானும் தே டு க என்பது கம் முன்னேர் கருத்தன்று. இப்பொருள் தீதின்றி வரும் பொருளாக இருக்கவேண்டும். அன்பிலுைம் அருளா