அழகைத் துறந்த அணங்கு 131
என்றே குறிப்பிடுகிரு.ர். அம்மையார் மென்மைத் தன்மைக்கும் இளஞ்சாயலுக்கும் மயில் உவமை மிக மிகப் பொருத்தமுடையதே. அன்னணமே தோற்றப் பொலிவுக்கும் பீடு நடைக்கும் பரமதத்தனுக்குக் காளே உவமை சாலவும் தக்கதே. ஆனால், ஈண்டுச் சேக்கிழார் தாம் கூறிய உவமையில் இப்பொருத்தமே அன்றி, ஏனேயதொரு பொருட் பொருத்தமும் செறியப் பாடியுள்ளார் என்றே யாம் நினைக்க வேண்டியிருக் கிறது. அரு ண் மொ ழி த் தேவர் புனிதவதியார் வரலாற்றை நன்கனம் தெரிந்தவர். இம்மணவாழ்க்கை பின்னல் எங்ங்ன்ம் இயங்கப்போகிறது என்பதையும் அவர் நன்கு அறிந்தவர். ஆதலின்; இவ்வுவமையின் மூலம் பின்னர் நடக்க இருக்கும் கிகழ்ச்சியை முன்னர் நாம் அறியவேண்டியே மேலே கண்ட உவமையைக் கூறினர். மயில் பறவை இனத்தைச் சார்ந்தது. காளே விலங்கு ஈட்டத்தைச் சேர்ந்தது. புள்ளும் விலங்கும் பொருந்துதல் கூடுமேர் அவை பொருந்தி வாழ்தல் என்பது முயற்கொம்பே அன்ருே ? அதுபோலவே, பரமதத்தனுக்கும் புனிதவ்தியார்க்கும் நடந்த கடி மணம் பொருத்தமற்றது. இவ்ர்கள் பின்னல் பொருங்தி வாழும் கிலேயினைப் பெருதவர் ஆவர், ! என்பதை உவமை முகத்தால் விளக்கி வைத்தார், தெய்வப்புலவர் சேக்கிழார் பெருமானர். பொருந்தி வாழும் இயல்பு.இவர்கள்பால் இருந்திருக்குமேல் புலவர், பால் பொருத்தம் அமையக் காளேக்கும் இளமணநாகிற் கும் என்றேனும், பெடை மயிலுக்கும், சேவல் மஞ்ஞைக்கும் கடிமணம் நடந்ததென்று செய்யுள் செய்து இருப்பர். இவ்விரு மணமக்களுக்கு நடந்த திருமணம் வாழ்க்கையில் பொருத்தமற்றதாக இருக்