பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அழகைத் துறந்த அணங்கு 133

'உத்தியோகம் புரு ட லட் சண ம்’ எ ன் பது முதுமொழி. ஆகவே, பரமதத்தன் காரைக்காலில் அங்காடி ஒன்று, அழகுடன் அமைத்துப் பொருளிட்டி வங்தனன் ஒருநாள் இவனது நண்பர் சிலர் இவனேக் காண அங்கு வக்து சேர்ந்தனர். நண்பர், பெரியோர், குழங்தைகள், தெய்வம் ஆகிய இவர்களைக் காணச் செல்வோர் வெறுங்கையுடன் செல்வது முறையன்று. ஏதேனும் ஒன்றைக் கையுறையாகக்கொண்டு செல்லு தல் மரபு. அமமுறையில் பரமதத்தனைக் காணவங்தவர் கள் மாங்கனி இரண்டை மணங்கனிந்து கொணர்ந்து ஈந்தனர். கனி பெற்ற காளேயாம் பரமதத்தன், அவற்றை இல்லத்துச் சேர்க்க ஏற்பாடு செய்து தன் பணியின்மீது ஊக்கமாய் இருந்தனன்.

இங்கிலேயில் ஒர் அடியவர் பசிமிக உடையராய் உணவில் மிகு வேட்கையராய்ப் புனிதவதியார் அகம் புகுந்தனர். வந்த விருந்தினரை அம்மையார் விருப் புடன் வரவேற்றனர். திருவடிகளை விளக்க நீரைத் திருத்தமுற முன்னளித்தார்.

'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்’ ஆதலின், அற்ருர் அழிபசி தீர்க்கப் பரிகலம் திருத்தி இன்னடிசில் படைத்திட்டார். விருந்தினர் வந்த வேளே திருவமுது செய்திருக்கக் கறியமுது மட்டும், அட்டு அமையா அற்றமாக அமைந்திருந்தது. என்ருலும், அம்மையார் உள்ளம் அசைந்திலது. அறிவுடையார் எல்லாம் உடையார் அல்லரோ ? இல்லது என் இல் ல வ ள் மாண்பால்ை ?' ஆகவே, இல்லாளன் அனுப்பிய கல்ல மாங்கனிகள் இரண்டில் ஒன்றை அடியவர்க்கு இனிதாகப் படைத்திட்டார். விருந்தினர்