பக்கம்:கட்டுரைக் கொத்து.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 கட்டுரைக் கொத்து

கொண்களுர்முன் படைத்தனர். அதனையும் சுவைத்த பரமதத்தன், இது முன் தந்த மாங்கனியன்று. இதன் சுவை முன்னையதினும் விஞ்சி நிற்கிறது. இஃது ஏது? உண்மையினே ஒளியாமல் உரைக்கவும் என்று உசாவின்ை.

அம்மையார் ஈண்டு இன்னது செய்வதென்றுணரா ராய், இடர்க்கடலில் இடர்ப்படுவாரானர். ‘அருளுடை யார் அளித்தருளும் செவ்விய பேர் அருள்' என்று விளம்பவும் விதுப்புற்ரும். நடந்தவண்ணம் விலவும் நடுங்கினர். இவ்வாறு இருபால் கவர்வுற்று இடை பூசல் ஆடி ஒருபால் படாமல் இருந்து, கற்புநெறி கடவாத காரிகையார் ஆதலின், செய்தபடி சொல்லு வதே கடன் என்று கடந்தவற்றை நடந்தவண்ணம் நவின்றிட்டார். கடந்தவற்றைக் கேட்டும் வணிகன் அமைதியுறவில்லே. தெய்வ க் திருவருளில் ஐயம் கொண்டான். மாதே ! நீ ஈசன் அருளால் மாங்கனி பெற்றது வாய்மையானல், மற்ருெரு கனியையும் வர வழைப்பாயாக. இன்றேல், கின்னுரையை யான் ஏற் கேன்' என்றனன்.

பரமதத்தனைப்போல் புனிதவதியார் ஈசன் அருளில் ஐயம் கொள்ளும் நெஞ்சம் வாய்ந்தவர் அல்லர். இறை வன் அருளில் என்றும் உறுதியும், உறைப்பும் உடை யவர். உள்ளே சென்ருர் வேண்டுவார் வேண்டுவதே ஈயும் வேணிப்பிரானே உளத்தமைத்து, 'உற்ற இடத்து உதவும் உத்தமரே மற்ருெரு மாங்கனியை ஈங்களித்து அருள்வீராக. இன்றேல், என்னுரை பொய்யாம்' என்று வேண்டிநின்ருர். அல்லல் தீர்த்து ஆளவல்ல ஆண்ட வண் அருளால், மற்றுமொரு மாங்கனி அம்மையார்