பக்கம்:கட்டுரை வளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சி. பா.

தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர் கண்டாச்சி புரமும் திருவண்ணா மலையும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இ டங் க ள். பைந் தமிழ் வ ள ர் க் கு ம்

பச்சையப்பன் கல் லூரிப் பாசறை மறவருள் ஒருவர்

அன்னைத் தமிழில் பி. ஏ. ஆனர்சு. அங்கு! முதல் வகுப்பில் தேறிய முதல்வர். ‘குறுந்தொகை’ பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம்.லிட்.. பட்டமும், சேரநாட்டு செந்தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைக்கு 1970-ல் டாக்டர் (பிஎச்.டி.) பட்டமும் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள், நல்ல நடைகொண்ட இந்த நாகரீகர்_பேர்சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில் சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர், பேராசிரிய ராகத் துறைத் தலைவராக விளங்குகிறார். முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர். இந்த முற்றிய புலமையாளர், முன்னாள் தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமாவார்

நாற்பது நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர்தமிழ் அறிவுக்கும், ‘தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றே சான்று! அண்மையில் வந்துள்ள அணிகலன் சங்க இலக்கியம் சில பார்வைகள் ஆங்கிலத்தில் ஒரு நூல். ‘சங்ககால மகளிர் நிலை பற்றிய ஆராய்ச்சி. இலக்கிய அணிகள்’ என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உருபா முதல் பரிசை பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தருக்குப்பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்கள்; புலவரேறு (குன்றக்குடி ஆதினம்)செஞ்சொற்புலவர் (தமிழ்நாட்டு நல்வழி நிலையம்) சங்க நூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்).

பெருந்தகை மு.வ. வின் செல்லப்பிள்ளை சி. பா. அவர் புகழ்பாடும் அருந்தமிழ்த்தும்பி! அயராது உழைக்கும் அருஞ்செயல் நம்பி ! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி ! எழுத்தில் நல்ல இலக்கிய பிறவி !

சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி. இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடுபடு. - மா.செ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கட்டுரை_வளம்.pdf/147&oldid=1382276" இலிருந்து மீள்விக்கப்பட்டது