கானல் வரி 89.
“தம்முடைய தண்ணளியுங் தாமும்தம் மான்றேரும் எம்மை நினையாது விட்டாரோ !! விட்டகல்க; அம்மென் இணர அடும்புகாள் ! அன்னங்காள் ! நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால் !
-சிலம்பு : கானல் வரி, 38.
என்று அவள் பாடிய பாட்டு, உயர்நிலைப் பாட்டாய், சிலப்பதிகாரத்தின் மணியாய் விளக்கமுறுகிறது. இறு தியாக அவள் பாடி முடிக்கும் பாட்டு, கோவலன் அவளை விட்டுப் பிரிந்து போகக் காரணமாய் அமைகிறது.
‘அடையல் குருகே ! அடையலெங் கானல்; அடையல் குருகே ! அடையலெங் கானல், உடைதிரை நீர்ச்சேர்ப்பற் குறுகோ யுரையாய் ! அடையல் குருகே அடையலெங் கானல்:
-சிலம்பு : கானல் வரி : 46.
என்ற பாடலில் கோவலன், மாதவி தன்னை விலக்கும் குறிப்பைக்காண்கிறான். மாதவியின் பாடல் இயற்கையை எல்லாம் கை கோத்துச் செல்லும்படி அமைகிறது :
“பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும்.”
-சிலம்பு : கானல் வரி, 51 : 3-4
என்று கூறி மாதவி தன் கானல் வரியை முடிக்கிறாள். கோவலன் மாதவியை மாயப் பொய் பல கூட்டும் மாயத் தாளாய் எண்ணிப் பிரிகிறான்.
கோவலன் மனம் பண்பட்ட மனமன்று; மாதவியின் அகமனத்தை அவன் முற்றிலும் அறிய இயலவில்லை. மாறாக, மாதவியோ, புடத்தில்இட்ட தங்கமாய்க் காட்சி தருகிறாள். ஆயின் மாதவி கோவலனைப் பற்றித் தவறாக எண்ணிய எண்ணம் சரிதானா என்று ஆய்ந்து பார்த்