பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 கண்டறியாதன கண்டேன்

பார்த்துப் பார்த்து ஆங்கிலேயர்கள் பெருமைப்படலாம்: தம் பழைய வரலாற்றுப் பெருமையையும் மணிமுடி தரித்து உலகாண்ட மன்னர்களின் புகழையும் கினைந்து பெருமிதம் அடையலாம். ஆனல் அந்த அணிகலன்களே அணி செய்யும் மணிகளை அதிகாரத்துக்கு அஞ்சி, வழங்கிய தாகப் பாவனை பண்ணி இழந்த காட்டினரும், அந்த மன்னர் களைத் தம்முடைய பாதுகாவலர்களாக எண்ணி அடிமைப் பட்டிருந்த காட்டினரும் அவற்றைக் காணும்போது அவர் களுக்கு உண்டாகும் உணர்ச்சி எப்படி இருக்கும்1 --

தலை அணிந்த முடிகள் சுடர்விடும் மாளிகை ஒருபுறமும், முடி.அணிந்த தலைகள் துணிபடும் கொலேக்களம் ஒரு புறமும் இருக்கும் இந்த லண்டன் டவர் இன்பத்தின் உச்சியையும் துன்பத்தின் படுபாதாளத்தையும் ஒருங்கே கினைக்கச் செய்; யும் இடமாக இருக்கிறது.