பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 கண்டறியாதன கண்டேன்

உள்ளது அது. மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. எங்கே பார்த்தாலும் பசுமைக் காட்சிகள்; மலைகள். அங்கே நிதியமைச்சரும் அவர் செயலாளரும் புதுவை முதல்வரும் இறங்கிக்கொண்டார்கள். நாங்கள் விமானத்தில் இருந்த படியே வெளியில் உள்ள இயற்கையெழிலேப் பார்த்து மகிழ்ந்தோம். விமானம் புறப்பட்டது.

அடுத்தபடி வரப்போவது பாரிஸ் என்பதை அறிந்த போது உள்ளத்தே ஒரு வேகம் உண்டாயிற்று. பாரிஸ் மாநகரத்தைப்பற்றி எத்தனையோ படித்திருக்கிறேன்: கேட்டிருக்கிறேன். இருந்தும் கேளில் பார்த்து அநுப விப்பது போலாகுமா? இன்னும் சில மணி நேரத்தில் அந்த நாகரிக எழில் நகரத்தில் அடி வைக்கப்போகிருேம் என்ற கினைவோடு எழுச்சியும் மகிழ்ச்சியும் தோன்றின.

இதோ பாரிஸ் வந்துவிட்டது! விமான கிலேயம் எவ்வளவு விரிவாக இருக்கிறது! விமான கிலேயம் கண்ணிற் பட்டுச் சில நேரம் கழித்தே கீழே இறங்கியது விமானம். நம் ஊரில் விமானம் ஒடும் வழி (Runway) அவ்வளவு நீளம் இல்லை. பாரிஸில் விமானம் ஒடிக் கொண்டே இருந்தது. ரெயில் வண்டியில், அடைய வேண்டிய ஜங்ஷனை அணுகுவது போலக் காட்சிகள் தென் பட்டன. - . -

விமானம் கின்றது. நாங்கள் இறங்கிளுேம். விமானத்தி லிருந்து வானில் அழைத்துச் சென்றனர். கம் ஊரில் விமானத்திலிருந்து இறங்கி நடந்தே விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும். ஆனல் மேலே நாட்டில் விமான கிலேயத்திலிருந்து நெடுந்துாரமானலும் குறுகிய துர மாலுைம் வண்டியில் ஏற்றித்தான் அழைத்துச் செல்கிருர்கள். .

பாரிளில் இறங்கியபோது என் கைக்கடிகாரம் 11-30 மணி காட்டியது; இரவு நேரம். அந்தச் சமயத்தில்