பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்பகலும் பிற்பகலும் 45:

மருந்துக் கடைக்காரர்? இந்தியன் ஒருவன் திருடினன் என்றுதானே எண்ணுவார்? ஆம்! ஒரு சிறிய இளைஞன் செய்த காரியம் இந்தியாவுக்கே இழுக்கைத் தருவதுதானே?"

அப்போது, முற்பகலில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்ஸில் அன்பர் கருத்திருமன், தம்மிடம் அதிகமாகக் கொடுத்து, விட்ட பணத்தைத் திருப்பித் தந்த காட்சி நினைவுக்கு: வந்தது. முற்பகலில் அதைக் கண்டு பெருமிதம் அடைந்தோம்; அங்கே எங்கள் தலை நிமிர்ந்தது. பிற்பகலில் இங்கே எங்கள் தலை கவிழ்ந்தது.