பக்கம்:கண்ணகிக் கதை.pdf/30

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி கதை

31


சோமாற் குண்டம் சூரியபொற் குண்டம்
தாமரைக் குளங்களிவை சார்ந்துநீ ராடி
கரையிலுள காமவேள் கோயிலதை நாடி
தரையிலே உடலாரத் தகவுற வணங்க்ப்
பிரிந்திட்ட கணவனும் பொருந்துவன் இணங்க
அருந்துயரம் ஒழியகாம் அடைகுவம் ஆங்கே
இருகுளம் நீராடிக் கருவேளைப் பணிவோம்
ஒருநாளில் என்ைேடு உவப்புடன் வருவாய்
தேவந்தி கன்மொழியைச் செல்வியவள் கேட்டாள்
பாவமகள் தமிழ்நாட்டுப் பண்பொன்றும் அறியாள்
எனவெண்ணிப் புன்முறுவல் ஏந்திழையும் செய்தாள்
கனிவுடைய தோழியவள் கனிந்தமொழி கேட்ட
கண்ணகியாம் கற்பரசி சொன்னமொழி கேட்பீர்!

இசை வேறு



அன்புநிறை தேவந்தியே!
அரியதமிழ் நாட்டியல்பை
இன்பமொடு கேட்டிடுவாய்
இனியவழி காட்டிடுவாய்
பயன்கருதித் தீர்த்தமாடார்
பழையதமிழ் நாட்டுமாதர்
நயனுடைய கணவரன்றி
நற்றெய்வம் கண்டறியார்
கொழுகனே தெய்வமென்று -
கொண்டுவணங் கிடுவரம்மா !
பழுதாகும் உன்மொழிகள்
பைந்தமிழர் போற்ருரம்மா !

வசனம்


அற்புடைய பெண்டிர்க்குக், கொண்ட கணவரே கண்.
கண்டி தெய்வமாவார்; அவரைமன்றிப் பிறதேகியங்களைப்

____________________________________________________________