பக்கம்:கண்ணகி தேவி.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி தேவி

25


விரைந்து சென்று இவ்வோலேயை அவர்கட்குக் காட்டி, என் பிரிவால் அவர்களுக்குற்ற தளர்ச்சியையும் துன்பத்தையும் நீக்குவாய்,” என்று கூறி அவனை அனுப்பிவிட்டு, அப்பால் கவுந்தியும் கண்ணகியும் இருக்குமிடத்திற்கு வந்தான். பின்பு அவர்களுடன் புறப்பட்டு, இடைவழியிற்கண்ட பாணர்களோடு அளவளாவி, அவர்களது வீணையை வாங்கி வாசித்துக் கொண்டே வழி நடந்தான். நடந்தவன், அவர்களே நோக்கி, “மதுரை நகர்க்கு இவ்விடத்திலிருந்து இன்னும் எத்தனை காதம் உள்ளது?” என்று கேட்டான். அதற்குப்பாணர்கள், “இனி நெடுந்தூரமன்று; அண்ணிதே; புலவர் மனத்தோடு நகரின் பலவகைமனங்களையும் மொண்டுகொண்டு, மதுரைத்தென்றல் நம்முகத்தில் வந்து வீசுகின்றது பார்” என்றனர். அன்று இரவு அவ்விடத்தில் தங்கி, நடு இராப்பொழுதில் புறப்பட்டு வையை ஆற்றின் கரையையடைந்து, “புனல்யாறு அன்று இது, பூம்புனல் ஆறு.” என்று தொழுது, மூவரும் ஒடத்தில் ஏறி ஆற்றைக் கடந்து, தென்கரை சேர்ந்தார்கள். மதுரையை வலஞ்செய்துவந்து மதிற்புறத்தில் கீழ்த்திசை வாயிலுக்கு அருகிலுள்ள புறஞ்சேரியில் அருகமுனிவர் இருக்கையில் தங்கினர்கள்.

கோவலன் மதுரை கண்டது :

செந்தமிழ் நாட்டின் இராசதானி எனப்படும் மதுரைமாநகரம் வழி வழியாகப் பாண்டியகுல மன்னர்கள் முடி சூடி வீற்றிருந்த பழைமையும் சிறப்பும் வாய்ந்தது பாண்டியர்கள் அரசர்க்குரிய அஞ்சாமையும் ஈகையும் அறிவும் ஆற்றலும் அறமும் மறமும் ஆகிய குணங்களிற் சிறந்தவர்கள். கண்ணகி காலத்தில் மதுரையில் ஆட்சி புரிந்த பாண்டியன் நெடுஞ்செழியன், அவன் மனைவி கோப்பெருந்தேவி என்று