பக்கம்:கண்ணன் கருணை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13 அப்பனைப்போல் மகனிருப்பது தேகதர்மம்.அறிவால் உணர்வால் ஒத்திருப்பது மனோதர்மம் உணவும் பிணியும் வழிமுறையில் தொடரும் விந்துவழி வந்ததடி இந்த வினை என்று முந்தை தானியர் மொழிந்ததும் உண்டு. கருவில் மகன் உருவான கதையை தாயும் மகனுக்குச் சொல்லத் தகுமோ அப்பன் இவனென்று அன்னேயே சொல்வாள் பாசத்தினால் தந்தையை மகன் அறிகின்றான்.பக்தியினால் இறைவனை உணர்வதே அறிவு.இல்லை என்பவன் தன்னையே இல்லை என்கிறான்.சாத்திரம் புரியாத நாத்தீக வாதம் அது.அறிய முடியாததை இல்லை என்பார். அறிவுக்கு எட்டாததை பொய்யே என்பார்.விஞ்ஞானத்துக்கு மேலாக மெய்ஞானம் ஏதென்பார் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஒழுக்கம் என்பது பழக்கத்தின் பழமை இயற்கையை வெல்லும் ஆற்றலே வாழ்க்கை. அறிவிலும் பெரிதில்லை ஆய்ந்துபார் என்பார் பொருளிலும் பெரிது உணர்வென்பதை உணரார் மானிட அறிவுக்கு ஒர்எல்லையுண்டு.எல்லைக்கு அப்பால் இயங்கும் ஓர் இயக்கம் அறிய முடியாதாயினும் உணரமுடியும். உணராது வாது புரிவார் அறியாமை என்னைபு பகைத்து நரகத்துக்கு நடப்பார்.வில்லில் வல்ல விஜயனே கேளாய் !அறிவு கொண்டு ஆய்வது விஞ்ஞானம் புலனும் புத்தியும் அதற்கான கருவிகள்.ஒரு புலனுக்கு ஒரு திறனே புலப்படாதன மிகப்பல மேலும் புலப்படுத்துகின்றேன் கேளாய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/14&oldid=1355134" இலிருந்து மீள்விக்கப்பட்டது