பக்கம்:கண்ணன் கருணை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17 காண்டிபன் எல்லாம் வல்லவனே எங்கும் நிறைந்தவனே ஒன்றான நீ ஆயிரம் தெய்வம் ஆனதேனோ கண்ணன் தனஞ்செயனே எனதருமை நண்பனே அர்ச்சுனா!

வானத்தில் மிதக்கும் நீரை மேகம் என்பார் மண்ணுக்கு வரும்போது மழை என்பார் நிலத்துக்குள் சுரக்கும் போது ஊற்றென்பார் ஆற்றின் ஓட்டத்தில் அதன்பேர் வெள்ளம் மலையில் வழியும் வடிவம் அருவியடா உலகின் பெரிய நீர்த்தேக்கம் அலைகடல் வரிகுளம் குட்டை கிணறென்று எத்தனையோ பெயர் சொல்லுவார் ஆக நீரும் நிலைக்குத் தக்க வடிவு கொண்டிருக்கும் நினைப்பவர் நினைவுக்கு ஏற்பவே இறைவன் பெயரும் உருவும் பெறுவான் ஆயிரம் பெயர் ஆயினும் வடிவாயினும் அனைத்தும் நாரணன் நான் ஒருவனே இன்றும் சொல்லுவேன் உன்னையே எண்ணிப்பார் அத்தை குந்திக்கு நீ மகன் தருமனுக்குத் தம்பி நகுலனுக்கு அண்ணன் அபிமன்யுவுக்கு அப்பன் பீஷ்மருக்குப் பேரன் தங்கைக்குக் கணவர் எனக்கு மைத்துனன் இன்னும் உள்ள பேர்க்கு எத்தனை உறவோ ? தெய்வம் ஒன்றாயினும்-சிந்திப்பவர் கற்பனைக்கே தோன்றும் வடிவத்தில் எல்லாம் தொழுவார் ஞாலத்தைப் பொறுத்துக் கதைகள் சொல்லுவார் படத்துக்கு ஏற்ப மொழிதோறும் பெயர் மாறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/18&oldid=1355698" இலிருந்து மீள்விக்கப்பட்டது