பக்கம்:கண்ணன் கருணை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19 ஆசைத்தீயில் வெந்தது போதுமடா அச்சத்தை வளர்த்து கவலை கொடுத்து பாசத்துக்கு ஆணிவேர் ஆகும் உணர்வு காமவெறிக்கு கண்ணை மறைத்தும் சினத்தின்பிறப்பிடம் ஆகும் சிற்றுணர்வு மயக்கப் படுத்தும் மானத்தை வாங்கும் புத்தியைக் குறைத்து புலன்களை அழித்து அறிவழிந்து நிலை குலைந்து நிற்கவைக்கும் பெரும்பித்த உணர்வுக்குப்பேர்தான் ஆசை அனைத்துக் கேட்கும் அதுவே வழித்தடம் காண்டீபன் ஆசை தீதென்று அறிக்கையிடும் பெருந்தகையே! கோகுலத்தில் நீ ஆடிய ஆடல் என்னவோ? கண்ணன் வெண்ணை திருடினேன் அது சின்ன வயது சிற்றாடை கட்டத்தெரியாத இளம் சிறுமியர் மேலாடையைப் பறித்தேன் இழிவென்ன கண்டாய்?மங்கையர் உச்சிமோந்த மழலைப் பருவமடா .உறியை உடைத்தேன்; உரலில் கட்டுண்டேன் ; மாடுகன்று மேய்த்தேன் ;மடுவில் குதித்தேன்; என்பது உலகத்துக்கு மாயை என்னைப் பொறுத்தவரை அனைத்தும் கர்மமே மனம் ஒன்றித்த செயற்பாடு அறிக.உன் அத்தை ராதை தவத்தின் தலைமகள். பாசத்தை வென்று விட்ட யோகி தியானத்தில் மூழ்குவாள் நான் தேவன் என்பதால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/20&oldid=1363753" இலிருந்து மீள்விக்கப்பட்டது