பக்கம்:கண்ணன் கருணை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28 தியானத்தில் நின்று என்னைப் பார்தெரிவேன் முனிவருக்கும் தேவருக்கும் மூலம் நானே திரண்ட பொருள் அனைத்தும் கண்ணன் தெரிகின்ற தோற்றமெல்லாம் கண்ணன் சிறந்ததில் சிறந்ததும் நானே ஆவேன் தெய்வங்களில் சங்கரன் தேவிகளில் பராசக்தி தேவர்களில் இந்திரன் முனிவர்களில் நாரதன் வேதங்களில் சாமம் நாதங்களில் பிரணவம் மன்னர்களில் ஜனகன் மந்திரியில் விதுரன் செல்வர்களில் குபேரன் வள்ளல்களில் கர்ணன் வீரர்களில் விஜயன் வில்லிலே காண்டீபம் சத்தியத்தில் அரிச்சந்திரன் சாத்திரத்தில் சகதேவன் சேவையில் அனுமான் சேனாபதிகளில் கந்தன் கவியினிலே வால்மீகி புவியினிலே தமிழ்நிலம் மலைகளிலே இமயம் நதிகளிலே கங்கை தலங்களிலே திருமலை தளங்களிலே வில்வம் மரங்களிலே அரசு மலர்களிலே மல்லிகை காலங்களில் இளவேனில் மாதங்களில் மார்கழி ஏழைகளில் குசேலன் எஜமானரில் துரியோதனன் துயரினிலே குந்தி சூழ்ச்சியிலே சகுனி மருந்தினிலே துளசி மந்திரத்தில் நாராயணாய என்று தனக்கினிய அம்சங்களைச் சொன்னான். காண்டீபன் "பெரியவனே மாயவனே பேருலகைப் படைத்தவனே பெருமைக்குரிய அனைத்தும் நீ என்ற பின்னே துயருக்கு என் அன்னையைச் சொன்னதென்ன'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/29&oldid=1363491" இலிருந்து மீள்விக்கப்பட்டது