பக்கம்:கண்ணன் கருணை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33 _வருணன் யமன் வாயு உள்ளிட்ட தேவர்கள் திருமாலின் அலங்காரப் பொருளாயினர் ரிஷிகள் திருத்துழாய் மாலையில் இடம் பெற்றார் அனந்தனும் வாசுகியும் அளப்பரிய பெருமாளின் மணிமார்பில் புரளும் தாவடங்கள் ஆயின. வானத்து ஒளிச்சுடர்கள் வைரமணி மாலையாக ஆயிரம் ஆயிரம் தாமரைகளைக் கொண்டு தேவனின் திருப்பாத கமலங்கள் ஆனதோ பிரளயத்தின் பேரிரைச்சல் வெறிச்சிரிப்பாக இடி முழக்கம் கடுங்குரல் ஆனது பிரணவத்தின் நாதம் ஓங்காரம் ஆக யாழும் குழலும் அமுத மொழியானது வளர்ந்தது திருமேனி வளர வளர உயர்ந்தது ஒளிப்பிழம்பு உயர உயர அடியும் முடியும் அறிய முடியுமோ ஹரி ஹரி என்றது. கடலின் ஓசை யும் ஓம் ஓம் என்றன உலகத்துக் குரல்கள் காற்றும் பாடிற்று வானும் எதிரொலித்தது கண்ணா கண்ணா என்பதற்கு மேலொன்றில்லை காண்பதற்கு இனிவேறு காட்சியில்லை கேட்பதற்கு இனிவேறு பெயரில்லை கருணைக்கு இனி வேறு தெய்வமில்லை விஜயன் மெய்மறந்தான் விழிகளும் பேசிற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணன்_கருணை.pdf/34&oldid=1363779" இலிருந்து மீள்விக்கப்பட்டது