204
கண் திறக்குமா?
பின்பற்ற துணிந்துவிட்ட என்னைத் தாங்கள் ஆசீர்வதிக்க வேண்டும்!” என்றேன்.
***
மறுநாள் என்னைக் கண்டதும் நண்பர்களில் சிலர் சூழ்ந்து கொண்டார்கள்.
‘'வரவேணும், வரவேணும். நீங்கள் காங்கிரஸிலிருந்து விலகி விட்டீர்களாமே? இன்று காலைப் பத்திரிகையில் செய்தி வந்திருந்தது; உண்மைதானா?” என்றான் ஒருவன்.
‘இவரைப் போன்றவர்கள் காங்கிரசை விட்டு விலகனால் தலைவர்கள் சும்மா இருப்பார்களா? ‘தங்களுடைய ராஜினாமாவை உடனே ரத்துச் செய்யுங்கள் என்று தந்தி அடிப்பார்கள்’' என்றான் இன்னொருவன்.
‘'அடிப்பார்கள், அடிப்பார்கள்; அதைப் பொருட்படுத்தாமல் இவர், தம்முடைய ராஜினாமாவுக்குக் காரணம் இன்னதென்பதை விளக்கி அறிக்கை மேல் அறிக்கையாக விட்டுக் கொண்டே இருப்பார்; பத்திரிகைகளில் அது பத்தி பத்தியாக வெளியாகும்!” என்றான் மற்றொருவன்.
‘'வெளியாகும் வெளியாகும், ‘தீனபந்து' சாகாமல் இருந்திருந்தால் கட்டாயம் வெளியாகும்’' என்று சொல்லி விட்டுக் 'குபீ' ரென்று சிரித்தான் மற்றும் ஒருவன்.
‘'அப்படியானால் இவரைப் போன்றவர்கள் தங்களைப் பற்றி ஏதாவது எழுதிக்கொள்ள வேண்டுமானால் சொந்தப் பத்திரிகை அவசியம் இருக்க வேண்டுமென்று சொல்லுங்கள்’ என்றான் முன்னவன்.
‘'இல்லையென்றால் அ.பி. செய்தி ஸ்தாபனமும், யு.பி. செய்தி ஸ்தாபனமும் இவரிடம் போட்டி போட்டுக்