பக்கம்:கதாநாயகி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14 * கதாநாயகி


ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றதா? தெய்வமே, அந்த அபலை ஊர்வசியைக் காப்பாற்று!

'ரோட்டரி' இயங்கிய சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது.

இனியும் அவனால் காலந்தாழ்த்த இயலாது. ஆகவே, புறப்பட்டான்.

"இருங்க; 'நம்ம டாட்ஜிலேயே போகலாம். வழியில் உங்களை ட்ராப் செய்கிறேனுங்க!” என்று மொழிந்தான் பூமிநாதன், பவ்யமாக வேண்டினான் அவன்.

பூமிநாதனின் உபசாரம் அவனுக்குத் தலைக் கிறுகிறுப்பை உண்டாக்கியது. 'தலைவலிபோய் திருகுவலி வந்த கதையாக ஆகிவிடுமே. பூமிநாதனோடு புறப்பட்டால்? அறையின் வாசலில் இறக்கிவிட்டுவிட்டு, அத்துடன் போக மாட்டாரே பூமிநாதன்! அறைக்கும் வந்துவிடுவாரே! வந்தால், அங்கு அடைக்கலப் பொருளாக இருக்கும் குமாரி ஊர்வசியையும் அல்லவா அவர் பார்க்க நேரிடும்? ஊஹும், வேண்டாம் இந்தத் தலைவேதனை! என்னைப் பற்றி அவர் ஐயப்படுவது இருக்கட்டும்! ஆனால், ஊர்வசியின் நிலைமையும் அல்லவா தர்மசங்கடமாகிவிடும்!.... ஊஹும், வேண்டாம் இந்த விஷப்பரீட்சை!

பூமிநாதன் பற்றவைத்த சிகரெட்டுடன் கிளம்பத் தயாராக எழுந்து காரின் அருகே வந்து, "புறப்படலாமா ஸார்?" என்று கேட்டான். சட்டையைத் தூக்கிவிட்டபோது, அவனது மார்புப் பகுதியில் பெரிய ரத்தத் தழும்பொன்று தெரிந்தது.

"காலம் கடத்திட்டுது. நீங்க புறப்படுங்க. நான் 'காலி' யை ஒரு க்ளான்ஸ் பார்த்திட்டுத்தான் வரவேணும்," என்று சொன்னான் அம்பலத்தரசன். பொய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/24&oldid=1319052" இலிருந்து மீள்விக்கப்பட்டது