பக்கம்:கதாநாயகி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*21


ஊர்வசி விழிகளை நிமிர்த்தி அவனை ஊடுருவிப் பார்த்தாள். அவன் கண்களில் என்ன மாயத்தைத் தரிசித்தாளோ? அவளுடைய கண்கள் புதிய ஒளி கூட்டித் திகழ்ந்தன. நீலப்பாதரஸ விளக்கில் அவளுடைய அழகு முகம் மேலும் அழகுடன் விளங்கியது. "நான் உங்ககிட்டே அடைக்கலப் பொருளாய் வந்திருக்கேன். இந்த உண்மையை நீங்க உணர்ந்திருக்கீங்க. உணர்ந்திருக்கிறதாவும் உங்க வாயாலே சொல்லவும் சொன்னீங்க. பின்னே, நீங்க என்னை எதிர்க் கேள்வி கேட்கிறீங்க! அதான் எனக்கு மலைப்பைத் தருதுங்க!" என்று தாழ்குரலில் செப்பினாள்.

"உங்க பேச்சையும் உங்க நிலைமையையும் என்னாலே புரிஞ்சுக்க முடியுது: உணர்ந்துக்கவும் செய்கிறேன். ஆனா, உங்க முடிவைக் கொஞ்சம் வெளிப்படையாகவே சொல்விடுங்க. அதுதான் நம் இருவருக்குமே நல்லது!"

"இன்றிரவு நடந்த 'வாழ்வதற்கே! என்று நாடகத்தில் நான் கற்பழிக்கப்பட்டதாக ஒரு பொய்யான கட்டம் கதைக்கென உருவான சமயத்திலே, நான் எனக்குரிய முடிவை நானே தேடிக்கொள்ள, கத்தும் கடலைச் சரணாகதி அடைஞ்சேன்!... அதுவும் கதைக்கான ஒரு பொய் முடிவு அது; கதாசிரியர் மன்மதனின் முடிவு! ஆனால், இப்போது நான் மெய்யாகவே கற்பழிக்கப்பட்டவள். எனக்கு மெய்யாகவே சாவதற்கு வழி தெரியும். ஆனால், சாக விரும்பல்லே! வாழ்வதற்கு ஆசைப்படுகிறேன்!... அதனாலே வாழத்தான் வழி கேட்கிறேன் உங்ககிட்டே! என் தோல்விக்குப் பின்னாலேயும் ஒரு வாழ்க்கை இருக்குது; எனக்கேற்பட்ட களங்கத்துக்கு அப்பாலேயும் ஒரு கதை இருக்குது என்கிறது என்னோட சிந்தாந்தம்!... வாழவேணும், வாழ்ந்தாக வேணும் என்கிற ஒரு திடமான வைராயக்கியத்தோடே நான் வந்திருக்கேன், உங்க நிழலை நாடி உங்க அன்பைத் தேடி!... என்னுடைய முதல் நாடகமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/31&oldid=1319048" இலிருந்து மீள்விக்கப்பட்டது