இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பூவை எஸ். ஆறுமுகம் ❖ 31
அம்பலத்தரசன் மருள் கொண்டவனாக அப்படியே நின்றான். அதுவரை தோன்றாத புதிய புதிய பயங்கள் அவனை ஆட்கொள்ளத் தலைப்பட்டன. இரவு ஊர்வசி நடத்திய சோதனையில் வென்றவன், ஏன் இப்போது இப்படி வெலவெலத்துப் போய் நிற்கிறான்?.....
‘தெய்வமே! என் ஊர்வசியைக் காப்பாற்று! நெஞ்சமே! உன் ஊர்வசிக்கு விடிவு காட்டு!... மனச்சாட்சியே! என் மனிதாபிமானத்தை ரட்சித்தருள்!... விடிகின்ற பொழுதுகள் நல்ல பொழுதுகளாகவே விடியட்டும்!’ .......
விடிந்தது.
☐☐☐