பக்கம்:கதாநாயகி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூவை எஸ். ஆறுமுகம்*47


நடப்பு! கம்மனாட்டி வளர்த்த கழுசடைக்குட்டி என்கிற அவப்பேரை என்னாலே தாள முடியாதம்மா!... சொல்லு ஊர்வசி! என்ன நடந்திச்சு? எங்கே ராத்திரிப் பொழுதைக் கழிச்சே? ஏன் அயலிடத்திலே ராத்திரி தங்கினே? சொல்லு! ஊம்....!" என்று கர்ஜித்தாள் மீனாட்சி அம்மாள். மீண்டும் மெளனம் காலத்தைக் கபளீகரம் செய்யவே, அந்த நரக வேதனையை மேலும் வளர்த்த விரும்பவில்லை அந்த அம்மாள். "சொல்லமாட்டே?” என்று ஓங்காரமாக முழங்கிக் கொண்டே, ஊர்வசியின் கன்னங்களில் 'பளீரென்று அறைந்தாள்'

ஊர்வசி விரக்தியோடும் அச்சத்தோடும் தன் அன்னையைப் பரிதாபமாகப் பார்த்தாள்.

"பாவி ஒருத்தன் என்னைப் பலாத்காரம் பண்ணிக் கெடுத்திட்டானம்மா!... என்னை நான் காப்பாத்திக்கிட எத்தனை முயற்சி செஞ்சும், விதி அவனுக்குச் சாதகமாய் இருந்திடுச்சம்மா!... என்னைத் தெய்வம் ஏமாத்திடுச்சம்மா!" என்று கூக்குரல் பரப்பினாள் ஊர்வசி. பெற்றவளின் பாதங்களைச் சரணடைந்து கதறினாள் அவள்.

"ஐயையோ! தெய்வமே!" என்று அலறினாள் மீனாட்சி அம்மாள். மண்டையில் ஓங்கி ஓங்கி அடித்துக் கொண்டாள் அம் முதியவள். மாளாத விழிநீர் வழிந்தது. தளர்ந்திருந்த உடல் அல்லாடியது.

பூகம்பம். வெடித்ததோ?

"அடி, பாவி! என்னை உசிரோடே கொன்னுட்டியே?.... கெட்ட கழுசடை அங்கிட்டே போய்க் கடலிலே விழுந்து சாகாமல், ஏன் எங்கண்ணிலே வந்து விழிச்சே" என்று நல்ல பாம்பாய்ச் சீறினாள் மீனாட்சி அம்மாள்.

"அப்படிச் செத்துப் போயிடுறது இப்போதும் எனக்குச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/57&oldid=1319014" இலிருந்து மீள்விக்கப்பட்டது