பக்கம்:கதாநாயகி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50*கதாநாயகி


சொல்லி, என்கிட்டே அடைக்கலம் அடைஞ்சுது. என் பேரிலே அதுக்கு இருக்கிற அந்த நம்பிக்கையையே என்னோட கடமையின்னு கருதி, அதோட இஷ்டப்பிரகாரமே அதை என் சொத்தாய் ஆக்கிக்கிடுறதாகவும் உறுதி கொடுத்தேன்!.... ராத்திரி என் அறையிலேதான் படுத்திருந்துச்சு!... என் பேரிலே அது கொண்ட நம்பிக்கையைக் காத்துக்கிட்டேன்!.... இப்போது என் வாக்கைக் காப்பாத்திக்கிட வேண்டிய ஒரு கடமையும் காத்திருக்குது! அதுக்கு உங்க தீர்ப்புத்தான் வேணும்! உங்களோட நல்வாக்கு எனக்கு - எங்களுக்கு கிடைச்சிட்டால், அப்புறம் எனக்கு இந்த லோகமே துச்சம் தான்!... உங்க மாதிரி எனக்கும் ஒரு வயசான தாய் இருக்கிறாங்க. அவங்க இந்தக் கதையைக் கேட்டு என்னை மாதிரியே இளகுவாங்கன்னுதான் நம்புறேன்!.... மற்றவங்க எங்களைப் பத்தி என்ன நெனைச்சாலும், என்ன பேசினாலும் அதெல்லாம் ஒரு பொருட்டல்ல எங்களுக்கு!... தான் ஏமாந்ததாலே, மனசொடிஞ்சு தற்கொலை முயற்சி எதையும் கையாளாமல் இருந்திச்சே ஊர்வசி, அதான் விதியின் விளையாட்டு!... அம்மா, இனிமே நீங்கதான் தர்மம்!... சொல்லுங்க உங்க முடிவை!... எங்க ரெண்டு பேர் வாழ்க்கையின் ஆரம்பமும் முடிவும் இனி உங்க வாக்கிலேதான் இருக்குங்க..." இதற்கு மேல் அவனுக்குப் பேசத் திராணி இல்லை. தொண்டையை அடைத்தது.

கார்த்திகைபாலன் அபயக்கரம் காட்டினான்.

சிறுகுழந்தை போலத் தேம்பிய மூதாட்டி மீனாட்சி அம்மாள், "மாப்பிள்ளை...." என்று உணர்ச்சிச் செறிவுடன் புது உறவு சேர்த்து விளித்தாள்.

அமைதி பூத்துப் புன்னகை பூத்தாள் ஊர்வசி.

'ஷார்ப்' பில் இசைத் தட்டுகள் சுழலத் தொடங்கின!

அப்போது, அந்த வீட்டு வாசலை விட்டு 'டாட்ஜ்' புறப்பட்டுக் கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/60&oldid=1319058" இலிருந்து மீள்விக்கப்பட்டது