பக்கம்:கதாநாயகி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 கதாநாயகி


அக்கணம் வரையிலும் தோன்ராததொரு புதுப்பிரச்னை அவனுள் பூதாகரமாக விசுவரூ பமெடுத்தது. மறுகணத்திலேயே, அவ்வெண்ணத்தை அவன் அலசினான். அவனுடைய மனச் சாட்சியின் முக்கோணத்தைச் சமைத்த உள்ளம், உணர்ச்சி, அறிவு ஆகிய உணர்வுப் புள்ளிகளை வைத்து எடை போட்டான். சிந்தனை சூடேறியது. புகை சூடேறியது. 'ஏன் இந்தப் புதிர் என்னுள் தோன்ற வேண்டும்? இதில் என்ன சிக்கல் இருக்கிறது? என்ன புதிர் இருக்கிறது...? எதுவுமே என் லட்சியத்துக்குக் குறுக்கே நிற்க முடியாதே?, என்வரை என் ஊர்வசி வரை! எங்கள் இருவரது மனநிலைகளும் சதுரங்கக் காய்களாக இருக்கட்டும், எங்கள் வரை ஆட்டம் என்றால், அதன் வெற்றியும் தோல்வியும் எங்கள் இரண்டு பேருக்குத்தானே சொந்தமாகப் போகிறது! நான் ஜெயித்தால் அதில் எனக்கும் பாகம் சேர்த்திதான்; இது போலவே, எங்களுக்குள் நிலவுகிற தோல்வியிலும் எங்கள் இருவருக்குமே ஜோடியாகப் பங்கு இருக்கத்தான் இருக்கும். ஆனால், எங்கள் விளையாட்டில் எங்கள் வாழ்க்கை எனும் சதுரங்க் ஆட்டத்திலே எங்களையும் மீறி, விதியோ அல்லது தெய்வமோ வெல்லும் ஒரு முடிவை நான் உண்டாக்கிக் கொடுத்துவிட மாட்டேன்! ஊர்வசியைப் பற்றித்தான் சிக்கலே இல்லையே?. அவளுடைய திட சித்தமும் நேர்மைத் திறனும் யாருக்கு வரும்?. ஆமாம், ஆவணி பிறந்து ஒரு முகூர்த்தத்தில் அவள் கழுத்தில் மூன்று முடிச்சுகளை நான் இட்டுவிடவேண்டும்!... அப்போதுதான், அவளுக்கு நல்ல மூச்சு வரும்! அவள் நம்பியுள்ள என்னுடைய மனிதாபிமானமும் மனிதத்தன்மையும் நல்ல மூச்சு விடும்!... 'இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற புதிய தத்துவத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/82&oldid=1284027" இலிருந்து மீள்விக்கப்பட்டது