திருவிழாக் காட்சிகள் 33
தலத்தில் உள்ள மூர்த்திகளுக்கு மூர்த்திகரம் மிகுதியாக உண்டாகியிருக்கிறது. பெரிய தலங்களில் யந்திரங்கள் உண்டென்பதை விசாரித்து உணரலாம்.
7 திருவிழாக் காட்சிகள்
கதிர்காமத் திருக்கோயிலில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெளிவாகத் தெரியாது. ஒருகாலத்தில் இந்தக் கோயிலேப் பூசிக்கும் தொண்டை ஹிந்துக்களே செய்து வந்ததாகச் சிலர் கூறுகிருர்கள். சிதம்பர ரகசியம் போலக் கதிர்காம ரகசியமும் இருக்கிறது. உள்ளே மிக விலே உயர்ந்த மாணிக்கத்தாலாகிய முருகன் திருவுருவம் இருக்கிறதென்று சிலர் கூறுகின்றனர். தகவிண கைலாச புராணம் என்னும் நூல் இந்தத் தலத் தைப் பற்றி வருணிக்கும்போது, இந்திர லே மணி யில்ை செய்த சிங்காதனத்தில் முருகன் எழுந்தருளி யிருக்கிருன் என்று தெரிவிக்கிறது. அருணகிரி நாதர் திருப்புகழில், - கனகமா ணிக்க வடிவனே மிக்க
- கதிர காமத்தில் உறைவோனே"
என்று பாடுகிரு.ர். - -
இவற்றை யெல்லாம் பார்க்கும்போது இங்கே மிக விலே உயர்ந்த பொருளால் ஆகிய முருகனுடைய
திருவுருவம் இருந்திருக்கவேண்டும் என்றே தெரிகிறது. தமிழ் க்ாட்டில் பல பழைய தலங்களில் இன்னும் விலை யுயர்ந்த மணிகளால் ஆகிய லிங்கங்களையும் ஆபரணங் களேயும் காணலாம். அவ்வண்ணமே இங்கும் முருகனுடைய திருவுருவம் மிக்க விலையுயர்ந்த மாணிக்கத்தால் அமைக் திருக்க நியாயம் உண்டு. - - •.
3 - -