பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"ஓ, தெரியுமே! இதோ பாருங்கள்" என்று கூறி, உடனே தம் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி ஒரு பக்கமாக வைத்தார்; தலையில் மாட்டியிருந்த தொப்பியைக் கையில் எடுத்துப்

பிடித்துக் கொண்டார். ஆடிப் பாடி நடிக்கத் தொடங்கிவிட்டார். நடிப்பைக் கண்டு அந்த நடிகை தம்மைப் பாராட்டுவாள் என்று ஆண்டர்சன் எதிர்பார்த்தார். ஆனால், அவள் ஏளனமாகச் சிரித்தாள். "பையனுக்கு மூளைக் கோளாறோ!"என்று நினைத்தாள்.

15