பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதை உணராமல், போலியையே உண்மை என்று சிலர் நம்பி விடுவார்கள், அப்படி மதி மயங்குவோருக்காகக் கூறப்பட்டதே இந்தக் கதை. இதைக் கூறியவர் யார் தெரியுமா? அவர்தாம் ஈசாப்.

ஈசாப் கதைகள் உலகப் புகழ் பெற்றவை. குழந்தைகள் முதல் ‘குடுகுடு’ கிழவர்கள் வரை எல்லோரும் படித்துச் சுவைக்கலாம். ‘ஓநாயும் ஆட்டுக் குட்டியும்’, ‘சிங்கமும் சுண்டெலியும்’, ‘நரியும் திராட்சையும்’ போன்ற கதைகளை உலகத்தின் மூலை முடுக்கிலுள்ள குழந்தைகள் கூட அறிவார்கள். கிறிஸ்தவ வேதமான பைபிளுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகமானவர்கள் படித்து வருபவை ஈசாப் கதைகள் தானே! ஈசாப் முந்நூறுக்கு மேற்பட்ட கதைகளைக் கூறியிருக்கிறார். எல்லாம் குட்டிக் குட்டிக் கதைகளாகவே இருக்கும். நமது பஞ்சதந்திர கதைகளைப் போலவே