பக்கம்:கதை சொன்னவர் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒரே நாளில் குடித்துப் பொட்டலாக்கி விடுவேன். அப்படிச் செய்யாவிடில், என் சொத்து முழுவதும் உங்களுக்குச் சொந்தம்” என்று குடிவெறியில் கூறிவிட்டார்.

ஆனால், மயக்கம் தெளிந்ததும், தாம் கூறியது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை உணர்ந்தார். “இப்போது என்ன செய்வது ?” என்று அடிமையாயிருந்த ஈசாப்பைக் கேட்டார்.

ஈசாப் ஒரு நல்ல யோசனை கூறினர். அதன்படி சமுத்திரத்திலுள்ள நீரைக் குடிக்க எஜமானர் ஈசாப்புடன் புறப்பட்டார். மற்றவர்களும் சென்றார்கள்.

சமுத்திரக் கரைக்குப் போனதும், ஈசாப் அங்கு நின்றவர்களைப் பார்த்து, “பெரியோர்களே, எங்கள் எஜமானர் சமுத்திரத்திலுள்ள நீர் முழுவதையும் குடிக்கத் தயார்தான். அவர் சமுத்திரத்திலுள்ள நீரைமட்டுமே குடிப்பதாகக் கூறினார். ஆனால், இப்போது பல ஆறுகளிலிருந்தும் நீர் வந்து சமுத்திரத்தில் விழுந்து கொண்டே இருக்கின்றதே! குடிக்கக் குடிக்கத் தண்ணீர் வந்து விழுந்து கொண்டே இருந்தால், எப்படிக் குடித்துப் பொட்டலாக்குவது? ஆகையால் முதலில் ஆற்று நீர் சமுத்திரத்தில் விழாதபடி, எல்லா ஆறுகளையும் தடுத்து நிறுத்த வேண்டும். நிறுத்தியவுடனே, என் எஜமானர் சொன்னபடி செய்து காட்டுவார்” என்றார்.

31